128
மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின்
அன்னச் சேவன் மாறெழுந் தாலும்
5கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகினல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ வரிதே.

திணை - அது; துறை - வாழ்த்து; இயன்மொழியுமாம்.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) ஊர்ப்பொதுவின்கண் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தி பரிசிலர் தூக்கிவைக்கப்பட்ட பிணிப்புப் பொருந்திய மத்தளத்தினது ஓசையினிய தெளிந்த கண்ணைப் பலாப்பழமென்று கருதித் தட்டினவிடத்து அதன்கண் வாழும் அன்னச்சேவல் அவ்வோசைக்கு மாறாக எழுந்து ஒலிக்கும் கழல இடப்பட்ட வீரவளையையுடைய ஆயது முகில் படியும் கொதியின்மலை, ஆடச்செல்லும் மகள் அணுகினல்லது பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது-எ - று.

இது கொடைச்சிறப்பும் வென்றியும் கூறியவாறாயிற்று.


(கு - ரை.) 1. மன்றப்பலவு : புறநா. 374 : 5.

1 - 2. புறநா. 89 : 7 - 8.

1 - 3. முழவுக்குப் பலாப்பழம் : புறநா. 236 : 1.

3. செத்து - கருதி; "தூவற் கலித்த புதுமுகை யூன்செத், தறியாதெடுத்த புன்புறச் சேவல்" (மலைபடு. 146 - 7)

5. மு. குறுந். 84 : 3.

6 - 7. புறநா. 54 : 4 - 14, 109 : 15 - 8, 111.

(128)