13
இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
5களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
10பழன மஞ்ஞை யுகுத்த பீலி
கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

திணை - பாடாண்டிணை; துறை -வாழ்த்தியல்.

சோழன்முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளிகருவூரிடஞ்செல்வானைக் கண்டுசேரமானந்துவஞ்சேரலிரும்பொறையொடு 1வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார் பாடியது. (13)

(இ - ள்.) இவன் யாரென்றுவினவுவாயானின், இவன்றான், புலியினது தோலாற்செய்யப்பட்ட மெய்புகுகருவி பொலிந்த கொளுத்தறஎய்த அம்புகள் போழப்பட்ட பரந்துயர்ந்தமார்பினையுடைய கூற்றம் போன்றகளிற்றின்மேலோன்; இக்களிறுதான்,கடலின்கண்ணே இயங்கும் மரக் கலத்தையொப்பவும்பலமீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும்சுறவினத்தையொத்த வாண்மறவர் சூழத் தன்னைமருவிய பாகரை யறியாது மதம்பட்டது; இவன்நோயின்றிப் பெயர்வானாக; வயலிடத்துமயிலுதிர்த்த பீலியை ஆண்டுள்ள உழவர்நெற்சூட்டுடனே திரட்டும் கொழுவிய மீனையும்விளைந்த கள்ளையுமுடைய மிக்க நீராகியவேலியையுடைய நாட்டையுடையோன் - எ - று.

களிற்றுமிசையோனாகிய இவன் யாரென்குவையாயின்,நாடுகிழவோன்; இவன் களிறு மதம்பட்டது; அதனால்,இவன் நோயின்றிப் பெயர்கவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

களிற்றுக்கு நாவாயோடு உவமைஎதிர்ப்படையைக் கிழித்தோடலும், திங்களோடுஉவமை வாளோர் சூழத் தன் தலைமைதோன்றச்செல்லுதலுமாகக் கொள்க.

தில் : விழைவின்கண் நின்றது.

பெருநற்கிள்ளி களிறு கையிகந்துபகையகத்துப் புகுந்தமையான் அவற்குத்தீங்குறுமென்று அஞ்சி வாழ்த்தினமையால், இதுவாழ்த்தியலாயிற்று; இவற்குத் தீங்குறின்நமக்குத் தீங்குறுமென்னுங் கருத்தால்நோயிலனாகிப் பெயர்கவென்றாராயின்,வாழ்த்தியலாகாது; துறை, பாட்டுடையானது என்றுணர்க.


(கு - ரை.) “இவன் யார்.....இவனேயென்னும்புறப்பாட்டினுட்சேரனை முன்னிலையாக்கி முடமோசியார் கூறுகின்ற காலத்துஇவனென்பது முன்னிலைப்படர்க்கையாய் நின்றது” (தொல்.எச்ச. சூ. 68, ந.) ; “இவன் யார்.....இவனேயென்னும்புறப்பாட்டினுள் இவனென்பது முன்னிலைப் படர்க்கையாய்நிற்றலும் இன்னோரன்ன பிறவும் இப்புறனடையானேஅமைத்துக்கொள்க.” (இ. வி. சூ. 372, உரை)

2. “புலிப்பொறிப் போர்வைநீக்கி” (சீவக. 266)

3. எழில் - எழுச்சி; “நுண்மாணுழைபுல மில்லா னெழில்” (குறள். 407)

2 - 4. “தன்மையென்பது சாதியியல்பு;பார்ப்பார் அரசர் இடையர் குறவரென்று இன்னோர்மாட்டு ஒருவரை யொருவர் ஒவ்வாமற் கிடக்கும் இயல்பு;அது மெய்த்தன்மையின்கண் வேறுபட்டு வருதலின் மெய்ப்பாடாயிற்று;.........‘புலிநிறக்கவசம் பூம்பொறி சிதைய.....களிற்று மிசையோனே‘எனவும்......வரும்” (தொல். மெய்ப். சூ. 12. இளம்.)

5. களிற்றிற்கு நாவாயுவமை ; கலித்.132 : 5-7; “நளிகடலிருங் குட்டத்து, வளிபுடைத்த கலம்போலக்,களிறு சென்று களனகற்றவும்” (புறநா. 26 : 1 - 3);“வீங்கு நோன்கயிறு...கடாஅயானையும்” (மதுரைக்.376 - 83); “நீயா னடுங்க...........கால வேகங் களிமயக்குற்றென”(மணி. 4 : 29 - 44)

6. புறநா. 396 : 25 - 7; பதிற்.90 : 17 - 8.

7. “எறிசுற விளையவர்”, “கோட்டுமீன்குழாத்தின் மள்ளரீண்டினர்”, “தூத்திரட்சுறாவினந் தொக்கபோன் மறவரும்” (சீவக.1446, 1845, 2325). பலபொருளோடு பலபொருள்கள் உவமையாய்வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; இ. வி. சூ. 639, உரை.

5 - 8. பல பொருளோடு பல பொருள்உவமையாய் வந்ததற்கு மேற்கோள்; தண்டி. சூ. 30,உரை.

11. சூடு - நெல்லரி; “சூடுகோ டாகப்பிறக்கி” (பொருந. 243)

10 - 11. “எல்வளை மகளிர் தெள்விளியிசைப்பிற், பழனக் காவிற் பசுமயி லாலும்”,“கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற், பழன மஞ்ஞைமழைசெத் தாலும்” (பதிற். 27 : 7 - 8, 90 : 41 - 2)

12. கொழுமீன் : ஒரு சாதிமீன்; திருச்சிற்.188 பேர்.

13. நாடுகிழவோன் : “காவிரிபுரக்கு நாடுகிழ வோனே” (பொருந. 248)

(13)


1. “வேளா விக்கோமாளிகை காட்டி” (சிலப். 28 : 198)