131
மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) முகிலினம் சென்று தங்கும் உயர்ந்தமலைக்குத் தலைவன், சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும் வாய்த்த (வாய்த்த-தப்பாத) வாளினையுமுடைய அண்டிரனது மலையைப் பாடினவோ களிறுகளை மிகவுமுடைய இந்தக் கவினையுடைய காடு?-எ - று.

யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டினும் அண்டிரனைப் பாடி னோர், யானை மிகவுமுடையரென்று அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிரனென்பதும் ஒரு பெயர்.


(கு - ரை.) 3. புறநா. 130 : 3, குறிப்புரை.

4. புறநா. 129 : 6, குறிப்புரை. களிறு - ஆண்யானையின் பெயராக இருப்பினும் இங்கே யானைக்குப் பொதுப் பெயராயிற்று.

(131)