(கு - ரை.) 1. கதிர் - வெயில். சூழி - ஒருவகை நீர்நிலை. 3. பொதியில் ஒருசிறை - மன்றத்தினொருபக்கம். 4. மத்தளத்தைப் போன்ற அரையையுடைய பனையின் அரம் போன்ற வாயினையுடைய மடல் ; “முழாவரைப் போந்தைப் பொருந்தி”, “மடல்வன் போந்தை” (புறநா.85 : 7, 297 : 10) ; “முழவுத்தாளெரி வேங்கை” (கலித்.44 : 4) 5. “நாரும் போழுஞ் செய்துண்டு” (புறநா.370 ; 2) 6. புகாஅ - புகுந்து. 7. ஊழ் - முறையே. உயவல் - வருத்தம். 8. புரவு எதிர்ந்துகொள்ளும் - பாதுகாத்தலை ஏற்றுக்கொள்ளும். 9. பிரசம் - தேன்கூடு ; “பிரசந்தூங்கு சேட்சிமை” (அகநா.242 : 21) அறாஅ யாணர் - இடையறாத செல்வ வருவாயையுடைய ; பொருந.1, ந. 10. படப்பை - தோட்டம். 11. ஆஅய் : விளி. 13. மழை - மேகம். 14. நின்னுள்ளி - உன்னை நினைத்து. 15. புக்கில் - எப்பொழுதும் இருத்தற்குரிய வீடு ; “புக்கி லமைந்தின்று கொல்லோ” (குறள்,340) 16. நிலீஇயர் - நிற்பாயாக ; அத்தை : அசை. 18 - 9. “துன்னி..............உணராவென்புழிப் பெரிய சிறியவென்பன பெருமை சிறுமைப்பண்படியாக வந்தமையின், இவ்வெச்சத்தின் குறிப்பென்றலு மொன்று ; இவ்வெச்சப் பொருள்படும் உரிச்சொலென்றலு மொன்று”, “பெரியவோதினு மென்பதற்குச் சிறிய வோதினுமெனக் குறிப்பும் மறைவிகற்பமும் அறிக” (தொல்.வினை. சூ. 30, 38, கல்.) ; “துன்னி.........உணராவென அகரம் வினைக்குறிப்புப்பற்றி வருவனவும்” (தொல்.வினை. சூ. 31, ந.) 21. பாடன்மார் - பாடுதலைத் தவிர்வாராக ; தொல்.வினை. சூ. 10, கல்,; ந. மேற். 20 - 21. தொல்.வினை. சூ. 10, சே.; இ - வி. சூ. 232, 239, உரை, மேற். 19 - 21. தொல்.இடை. சூ. 8, கல்.; நன். சூ. 326, மயிலை ; நன். வி.சூ. 327, மேற். (375)
|