(கு - ரை.) 1. மரை - மரையா;ஒருவகைவிலங்கு; “மரையா மரல்கவர" (கலித்.6) 1 - 2. நெல்லிக்காயை மரையா உண்ணும்;“நெல்லி, மரையின மாருமுன்றிற், புல்வேய் குரம்பைநல்லோ ளூரே”, “புரிமட மரையான் கருநரை நல்லேறு,தீம்புளி நெல்லி மாந்தி” (குறுந். 235, 317);“புல்லிலைப், பராரை நெல்லி யம்புளித்திரள்காய், கான மடமரைக் கணநிரை கவரும்”, “பளிங்கினன்ன தோற்றப், பல்கோ ணெல்லிப் பைங்காயருந்தி,மெல்கிடு கவுள மடமரை யோர்க்கும்” (அகநா.69, 399) 4. புறநா. 331 : 2; “வில்லேர்வாழ்க்கை விழுத்தொடை மறவர்”, “வானம் வேண்டாவில்லே ருழவர்” (அகநா. 35, 193); “வில்லேருழவர்பகை கொளினும்” (குறள், 872) 6 - 7. புறநா. 370 : 6; “துடிக்குடிஞைக்குடிப்பாக்கத்து” (பொருந. 210); “ஆகுளி கடுப்பக்,குடிஞை யிரட்டு நெடுமலை” (மலைபடு. 140 - 41); “உருடுடிமகுளியிற் பொருடெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞையநெடும்பெருங் குன்றம்” (அகநா. 19 : 4 - 5) 8. பிட்டன் : புறநா. 172 : 8; அகநா.77, 143. 10 - 11. யானைக்கோடு முத்தம் பயத்தல்: புறநா. 161 : 16 - 7; “முத்துடை மருப்பின் மழகளிறுபிளிற” (பதிற். 32); “பெருங்களிற்று முத்துடைவான்கோடு” (முருகு. 304 - 5); “யானை, முத்தார்மருப்பு” (குறிஞ்சிப். 35 - 6); "யானை, முத்துடைமருப்பின்” (மலைபடு. 517 - 8.) 12. புறநா. 232 : 3, 367 : 7; “நாரரிநறவம்” (பரி. 6 : 49); “நாரரி நறவுண் டிருந்ததந்தைக்கு”, “பன்மீன் கொள்பவர் முகந்தவிப்பி,நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்” (அகநா.216, 296) 13. பண்ணமை நல்யாழ் : புறநா.164 : 11. 12 - 3. புறநா. 160 : 10 - 11. 17. உலைக்கல்: குறுந். 12. 14 - 7. புறநா. 109 : 11 - 8, 178 : 6 - 11. 16. கூடம் - சம்மட்டி. (170)
1 புறநா. 224 : 1 - 4. 2 புறநா. 114 : 4.
|