(கு - ரை.) 1. முந்நீர் : புறநா. 9 : 10, குறிப்புரை. 2. மாகவிசும்பு : புறநா. 35 : 18, குறிப்புரை. 1-2. “மீன்றிமில் விளக்கமும்” என்பதற்கு இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர்; சிலப். 6 : 142, அடியார். 3. உவவு-உவா; பூரணை. 5. சில்வளைவிறலி : புறநா. 64 : 2, 103 : 4; பதிற். 40 : 21, 57 : 6, 78 : 3; ‘சில்வளை விறலியென்றது பல்வளையிடுவது பெதும்பைப் பருவத் தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறியவாறு’ (பதிற். 57 : 6, உரை) 7-9. புறநா. 84 : 6, 90 : 6 - 8; “கதுமென மண்ட, அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப, நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச், சாகாட் டாளர் கம்பலை” (பதிற். 27 : 12 - 4); “அள்ளற் றங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே” (மதுரைக்259-60); “மடுத்தவா யெல்லாம் பகடன்னான்” (குறள், 624); “நிரம்பாத நீரியாற்றிடுமணலு ளாழ்ந்து, பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி” (சீவக. 2784); “குண்டுதுறை யிடுமணற் கோடுறவழுந்திய, பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல” (பெருங். 1. 53 : 53-4) 11-2. புறநா. 35 : 19 - 21, குறிப்புரை. “எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடை” (கலித். 9 : 1) தலைவன்புகழ் குடையடுத்துவந்ததற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 31, ந. (60)
1.புறநா. 20 : 8 - 9; “வருந்திய குடிமறைப் பதுவே” (புறநா. 35 : 19 - 20) 2. இறப்ப இழிந்த ஆனந்தவுவமையாவது உயர்ந்த பொருளுக்குத் தாழ்ந்த பொருளையுவமம் கூறுவது: ‘இறப்ப விழிந்தது மிறப்ப வுயர்ந்ததும், அறத்தகை வழீஇய வானந்த வுவமை’ என்பது விதி. 3. நிறைமதி தொழப்படாதென்றது, பிறை தொழப்படுமென்பது கருதி; இதனை, புறநா. 1 : 9 - 10, குறிப்புரையாலும், “வளையுடைத்தனைய தாகிப் பலர்தொழச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று பிறையே” (குறுந். 307) என்பதனாலும் அறிக.
|