(கு - ரை.) 1. புறநா.11 : 16. 2. ஐது-மெல்லிது; ஐ : பகுதி; “ஐதுவீ ழிகுபெயல்” (சிறுபாண்.13) 3. பொலமென்னுஞ் சொல் பிறகணத்து மகரங்கெட்டு முடிதலுக்கு மேற்கோள்; தொல்.புள்ளிமயங்கு. சூ. 61, ந. 5. நாண்மகிழிருக்கை-காலையில் யாவரும் தன்னைக் காணும்படி காட்சிக்கு எளியனாய் வீற்றிருக்கை; இது நாளவையெனவும் கூறப்படும்; புறநா.54 : 3, 123 : 1. 1-5. புறநா.11 : 11 - 7, கு-ரை.319 : 14-5; 364 : 1 - 3; “எரியகைந் தன்ன வேடி றாமரை, சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி, நூலின் வலவா நுணங்கரின் மாலை, வாலொளி முத்தமொடு பாடினி யணிய” (பொருந.159-62, கு-ரை.) 11-2. இல்லையென்போர் - நாஸ்திகர்; இவ்வடிகளை, ‘சிறியவினமாவது நல்லத னலனுந் தீயதன் றீமையு மில்லென்போரும் .....உள்ளிட்ட குழு’ (குறள், 46-ஆம் அதிகார அவதாரிகை) என உரைநடையாக அமைத்தனர் பரிமேலழகர்; ‘அறிவாவது: நல்லதனலனுந் தீயதன் றீமையு முள்ளவாறுணர்தல்’ (தொல்.பொருளியல், சூ. 53, ந.) 15. புறநா.24 : 5. 19. கூவை - மஞ்சளைப்போல்வதொரு புதல்; இது தென்னாட்டுள்ள மலைப்பக்கங்களிற் காணப்படுகின்றது; “நூறொடு குழீஇயின கூவை” (மலைபடு.137); “பொலிகூவை” (மதுரைக்.142) 23-4. “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கு மதுவிளிந் தற்று” (குறள்,332) என்பது இவ்வடிகளுடன் ஒப்பிடற்பாலது. 22-4. விழாக்காலத்துக் கூத்தர்கள் வருதலும் அது முடிந்தபின்பு அவர்கள் வேறிடஞ் செல்லுதலும், “அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச், சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது, வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருந.1 - 3) என்பதனாலும் அறியப்படும். ‘இல்லையென்போர்க்கின னாகிலியர்’ என்பது முதலியவற்றால் அறனும், ‘படை கொள்மாக்கள்....நின் செய்கை’ என்பது முதலியவற்றால் பொருளும், ‘பாண்முற்றுக நின்னாண்மகிழ் இருக்கை’ என்பது முதலியவற்றால் இன்பமும் கூறப்பெற்றமையின், இதன் துறையும் முதுமொழிக்காஞ்சியாயிற்று. (29)
1.ஆடுங் கூத்திய ரணியே போல , வேற்றோ ரணியொட "வந்தீரோவென" (மணி. 12:51:2); "ஆடுங் கூத்தர்போ லாருயி தொருவழிக், கூடிய கோலத் தொருங்குநின் றியலாது" (சிலப்.28: 165-6) என்பவை இங்கே கருதற்குரியன.
|