(கு - ரை.) 1. நீறு - புழுதி; “நீறடங்குதெரு” (சிறுபாண். 201); “கரம்பைப் படுநீ றாடி” (பெரும்பாண்.93) 2. வம்பப்பெரும்பெயல் - புதிய மழை;“வம்ப மாரியைக் காரென மதித்தே” (குறுந். 66 :4). இறந்தென - போக. 3. குரால் - ஒருவகைப்பசு; கோட்டானுமாம். 4. சேற்றைத் தோண்டுதலால் உண்டாகியகலங்கிய ஊறல்நீரை; “மணற்கிளைக்க நீரூறும்” (திருவள்ளுவமாலை,31) 5. “ஊண்முறை யூட்டும்” (புறநா.331 : 8) 6. முளவுமா - முள்ளம்பன்றியை; தொலைச்சிய- கொன்ற; “முளவுமா வல்சி” (ஐங்குறு. 364) ; “முளவுமாத்தொலைச்சிய பைந்நிணப் பிளவை” (மலைபடு. 176) 4 - 6. “கல்லறுத் தியற்றிய வல்லுவர்க்கூவல், வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி” (புறநா.331 : 1 - 2) 7. உடும்பிழுது - உடும்பினது நிணத்தை.“உடும்பின் விழுக்கு நிணம்” (புறநா. 326 : 9 - 10).அறுத்த உடும்பிழுதையென்க. ஒடுங்காழ்ப்படலை -ஒடுமரத்தின் கழிகளாலாகிய கட்டுக்கதவு; படலுமாம்;ஒடு - ஒருவகை மரம்; “ஒடுமரக் கிளவி” (தொல்.உயிர். சூ. 60) 8. முன்றிலில். கூறுசெய்திடுமார் -பிறர்க்குப் பகுத்துக் கொடுப்பாராய். 10. மன்றத்து - பொதுவிடத்துள்ள. 9 - 10. “நெய்ந்நறைக் கொளீஇய மங்குன்மாப்புகை, மறுகுடன் கமழும்.” (புறநா. 329 : 3 - 4) 11. அலந்தலை : “அலந்தலை மராமும்”(சிலப். 11 : 75). இரத்தி - இத்திமரம்; இலந்தையுமாம்.அலங்குதல் - அசைதல், நீழலில். 10 - 11. “இரத்தி நீடிய வகன்றலை மன்றம்”(புறநா. 34 : 12) 12. வேட்டுவர் சிறாஅர் : புறநா.324 : 1 - 7. 13. மிளை - காவற்காடு; புறநா. 326: 7. 14. அரசன் தன்னிடத்தே வந்தாலும்தாங்குதற்குரிய. 14 - 5. “வரகுகட னிரக்கு நெடுந்தகை,அரசுவரிற் றாங்கும் வல்லாளன்னே” (புறநா. 327 :7 - 8) ஊர் (15) இருக்கையது (13) (325)
|