(கு - ரை.) 1-2. ‘தகரவுகரம், கழிந்தது......கரப்பினும் என்னும் புறப்பாட்டினுள், பொழிந்து எனவும், விளைந்து எனவும் இறந்தகாலம் பற்றி வந்தமையின் ஏனையவற்றிற்குஞ் சிறுபான்மை இறந்தகாலமுமுண்டென அறிந்துகொள்க’, ‘கழிந்தது....கரப்பினும்: என்புழிப் பொழிந்தெனவும் விளைந்தெனவும் இறந்தகாலம் உணர்த்தின’ (தொல். வினை. சூ. 6, கல். ந.); ‘கழிந்தது.....கரப்பினும் : எனப் பொழிந்து விளைந்தென்னும் துவ்வீற்றுத் தன்மையொருமை வினைமுற்றுக்கள் இறந்தகாலமும் சிறுபான்மை காட்டுமெனவுங் கொள்க.’ (இ. வி.சூ. 50, உரை). கண்மாறல், ஒரு சொல். 9-11. “பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற, அரிய வென்னா தோம்பாது வீசி” (பதிற்.44); “அரிய வெல்லா மெளிதி னிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி” (மதுரைக். 145 - 6). ‘ஒன்னா, ராரெயிலவர்கட் டாகவு நுமதெனப் பாண்கடனிறுக்கும் வள்ளியோய்’ என்பதற்கு இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்கு அந்நகரைக் கொடுத்தது இங்கே உதாரணமாக அறியற்பாலது. மு.‘கொள்ளார் தேஎங்குறித்த கொற்றமும்-பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான்போல் வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்தவெற்றியும்; தன்னையிகழ்ந்தோரையும், தான் இகழ்ந் தோரையும் கொள்ளாரென்ப....கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டினுள், ஒன்னார்....வள்ளியோய் என்பதுமது’ (தொல். புறத்திணை. சூ. 12, ந.) (203)
1.“ஈத்துவக்கு மின்பம்” (குறள், 228) 2. “இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற், றன்மெய் துறப்பான் மலை” (கலித். 43 : 26 - 7)
|