397
வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரற்றோற் றினவே
பொய்கையும் போதுகண் விழித்தன பைபயச்
சுடருஞ் சுருங்கின் றொளியே மாடெழுந்
5திரங்குரன் முரசமொடு வலம்புரி யார்ப்ப
இரவுப்புறங் கண்ட காலைத் தோன்றி
எஃகிரு ளகற்று மேமப் பாசறை
வைகறை யரவங் கேளியர் பலகோட்
செய்தார் மார்ப வெழுமதி துயிலெனத்
10தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
நெடுங்கடைத் தோன்றி யேனே யதுநயந்
துள்ளி வந்த பரிசில னிவனென
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கல னிறைந்த மணநாறு தேறல்
15பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
மாரி யன்ன வண்மையிற் சொரிந்து
வேனி லன்னவென் வெப்பு நீங்க
அருங்கல நல்கி யோனே யென்றும்
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
20அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த
தீயொடு விளங்கு நாடன் வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
எறிதிரைப் பெருங்கட லிறுதிக்கட் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்றிசைத் தோன்றினும்
25என்னென் றஞ்சலம் யாமே வென்வேல்
அருஞ்சமங் கடக்கு மாற்றலவன்
திருந்துகழ னோன்றாட் டண்ணிழ லேமே.

(பி - ம்.) 2 ‘குரற்றோன்றினவே' 3 ‘பைபபய' 4 ‘பாடெழநது' 5 ‘திரங்குகுரன்' 6 ‘பிறங்கணட' 11 ‘தோனறியோனே' 16 ‘வண்மைநிற்'

திணை - அது; துறை - பரிசில்விடை; கடைநிலை விடையுமாம்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 1எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.


(கு - ரை.) 1. ஏர்தரும் - எழும். 2. குடம்பை - கூடு.

1 - 2. "வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்ப", "மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர" (புறநா.385 : 1, 398 : 1)

3. கண்விழித்தன - மலர்ந்தன.

4. சுடர் ஒளி சுருங்கின்று - சந்திரன் ஒளிகுறைந்தது ; புறநா.398 : 1 5. இரங்குரல் - இரங்குகுரல்.

6. "இரவுப்புறம் பெற்ற வேம வைகறை" (புறநா.398 : 6) ; "இரவுத்தலைப் பெயரு மேம வைகறை" (மதுரைக். 686)

7. எஃகிருள் - குறைந்த இருட்டு. ஏமம் - இன்பம்.

8. கேளியர் - கேட்க. பலகோள் - பலவகை.

10. புறநா.374 : 6. 11. நயந்து - விரும்பி.

13. குய் - தாளிப்பு.

15. கலிங்கத்திற்குப் பாம்பின் தோல் உவமம் ; "அரவுரி யன்ன வறுவை நல்கி" (பொருந.83) ; கூரெயிற் றரவி னுரிவை யன்ன வானுண்டுகில்" (பாகவதம், 10 : கோவியர் துகில். 9) ; "பாழிவா யரவினுரிநிகராடை" (இலிங்க. அம்பரீடனை. 56) ; "அரவினுரியன்ன பட்டாடை" (வாயுசங். கிரியா. 13) ; "பையரா வுரியி னன்ன நடைப்படாம்" (திருவிளை. திருமண. 147)

17. "பொழிபெயல் வண்மையான்", "சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கும், இரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான்" (கலித்.57 : 12, 100 : 11 - 2)

15 - 6. பொருந.82 - 7.

18. கலம் - ஆபரணம். 19. செறு - வயல். 21. தீ - வேள்வித்தீ.

22. தீவொன்றிற் பொன் உண்டாகுமென்பர்; "பைம்பொன் விளைதீவினிதி தடிந்து", "நன்பொன் விளை தீவமடைந் தஃதே" (சீவக.106, 503) 23. இறுதி - ஊழிக்காலம்.

24. கனலி - சூரியன்.

27. "யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை" (புறநா.379 : 1)

(397)


1. திருவாரூர்க்குத் தென்மேற்கில் எருக்கங்காடென ஓரூருள்ளதென்பர்.