273
மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வ னூரு மாவா ராதே
5இருபேர் யாற்ற வொருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
உலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே.

(பி - ம்.) 2 ‘எல்லா மாவும்’ 5‘இரும்பே ராற்ற லொருபெருங்கடலை’ 7 ‘உலந்தின்று’

திணை - தும்பை; துறை - குதிரைமறம்.

எருமைவெளியனார்.


(கு - ரை.) 1. நெடுஞ்சீர்வண்ணத்திற்குமேற்கோள்; தொல். செய். சூ. 220, பேர்.; ந.

3. புறநா. 310: 7 - 8.

3 - 4. புதல்வற்றந்த செல்வனென்றது,கணவனை.

5. கூடலென்றது, இரண்டாற்றுநீரும்கூடுமிடத்தை.

5 - 7. புறநா. 260: 22 - 4; “ஆற்றங்கரையின் மரமு மரசறிய, வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே”(நல்வழி, 12)

மு. தும்பைத்திணைத் துறைகளுள்,‘குதிரைநிலை’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 17, .

(273)