303
நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ள மொழிக்குங் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த
வெந்திற லெஃக நெஞ்சுவடு விளைப்ப
5ஆட்டிக் காணிய வருமே நெருநை
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்குமருப் பியானை யெறிந்த வெற்கே.

(பி - ம்.) 1. ‘போற்குளங்குடையூ’,2 ‘கொடையின் மான’ 4 ‘வெந்தெறல்’ 5 ‘வாடிக்காணிய’, ‘வாட்டிடக்காணிய’ 6 ‘வேந்தன்’ 6 - 7 ‘வேந்தர்தாமுன்னர்க்கரைபொரு முன்னர்’ 7 ‘கங்கரைபொரு முன்னீர்’ 7 ‘திரையிற்’9 ‘இடுமருப்பியானை’

திணையும் துறையும் அவை.

எருமை வெளியனார்.


(கு - ரை.) 1. பிறக்கு - பின்.கடையூஉ - செலுத்தி; ‘’நிலம்பிறக் கிடுவபோலுங்கொய்சுவற் புரவி” (சீவக. 3049)

2. மனத்தின் விசையையும் ஒப்பன்றென்றுநீக்குகின்ற கதி விசேடத்தையுடைய குதிரையின்மேல்;‘’உள்ளம் போல வுற்றுழி யுதவும்,

புள்ளியற் கலிமா வுடைமை யான” (தொல்.கற்பு. சூ. 53); ‘’மானுருவாகநின் மனம்பூட் டினையோ”(அகநா. 384 : 10); பகைவருடைய ஊக்கத்தை ஒழித்தற்குக்காரணமான சுழற்சியையுடைய குதிரை யென்றலுமாம்.

3 - 4. கூர்த்த எஃகமெனக் கூட்டுக;எஃகம் - வேல்.

5. ஆட்டி - அசைத்து ; திரித்தென்றுமாம்.காணிய வரும் - காணும் பொருட்டு வருவான். நெருநை - நேற்று.

6. உரைசால் - புகழ் அமைந்த; “உரைசால்சிறப்பி னரைசுவிழை திரு”, ‘’உரைசால் சிறப்பின்,மன்னன் மாறன்” (சிலப். 2 : 1, 8 : 5 - 6 )

7. திமிலின் - தோணிபோல.போழ்ந்து - படையைப் பிளந்து; புறநா. 299 : 3.

8. கயந்தலை - மெல்லிய தலை; ‘’கன்றுடைமடப்பிடிக் கயந்தலை மண்ணிச், சேறுகொண் டாடிய வேறுபடுவயக்களிறு” (அகநா. 121 : 5 - 6);

‘’கயந்தலை மடிப்பிடி” (அகநா.165, 202; மலைபடு. 307; கலித். 23: 10)

‘கய’ என்னும் உரிச்சொல் மென்மையைஉணர்த்துதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி.சூ. 26, சே.

8 - 9. அவ்வரசருடைய பெண் யானைகள்துணையிழப்ப விளங்கு கின்ற கொம்பினையுடையகளிற்றி யானைகளைக் கொன்ற என்பொருட்டு; புலம்ப- வருந்தவென்னலுமாம்; ‘’புல்லார் பிடி புலம்ப” முத். 28.

(303)