248
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளைய மாகத் தழையா யினவே
இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னா வைக லுண்ணும்
5அல்லிப் படூஉம் புல்லா யினவே.

திணை - அது; துறை - தாபதநிலை.
...............ஒக்கூர் (பி - ம். எக்கூர்) மாசாத்தனார்பாடியது.

தாபதநிலையாவது:-
‘’குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூறின்று” (பு. வெ.257)

(இ - ள்.) இரங்கத்தக்கன,சிறிய வெளிய ஆம்பல்; அவைதாம், யாம் இளையேமாயிருக்கமுற்காலத்துத் தழையாயுதவின; இக்காலத்துப் பெரியசெல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக உண்ணுங்காலைமாறி இன்னாத வைகும்பொழுதின்கண் உண்ணும் தம் அல்லியிடத்துண்டாம்புல்லரிசியாய் உதவின-எ - று.

தாம் இன்புறுங்காலத்தும்துன்புறுங்காலத்தும் துணையாய் உதவின வாதலான், அளியவாயினவெனஆம்பலைநோக்கிக் கூறியவாறாயிற்று.

1 நெல்லலாவுணவெல்லாம்புல்லென்றல் மரபு.


(கு - ரை.) 1-2. ‘’வயன்மல ராம்பற்கயிலமை நுடங்குதழை” (ஐங்குறு. 72); ‘’ அயவெள்ளாம்ப லம்பகை நெறித்தழை” (குறுந். 293); ‘’ஆம்பலணித்தழை யாரந் துயல்வரும், தீம்புன லூரன் மகள்”(திணைமொழி. 40);
கலித். 102: 5.

4-5. புறநா. 250 : 4 - 5. 1-5. புறநா.280 : 12 - 4.

மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘காதலனிழந்த தாபதநிலை’ என்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 19, இளம்; சூ. 24, .(248)


1 ‘புல்லென்பது பலபொருளொருசொல்லாகலான்நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் புல்லென்பதுஉணவின் மேற்கொள்க’ (தொல். மரபு. சூ. 25, பேர்.);‘’புல்லார் பவர்கணெற் சோறுபெற்றாங்கு” (வெங்கைக்.18)