279
கெடுக சிந்தை கடிதிவ டுணிவே
மூதின் மகளி ராத றகுமே
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
5நெருந லுற்ற செருவிற் கிவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
10ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே.

(பி - ம்.) 5 ‘நெருநை யுற்ற’ 7‘முயங்கி’ 8 ‘வெளிறு’

திணை - வாகை; துறை - 1 மூதின்முல்லை.

ஒக்கூர் மாசாத்தியார்.


(கு - ரை.) 1. இவளென்றது, கோலஞ்செய்துமகனைப் போர்க் கனுப்புந் தாயை.

2. மூதின் மகளிர் - முதிய மறக்குடியிற்பிறந்த மகளிர்; புறநா. 19 : 15; மறக்குடியை மூதிலென்றது,“கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு,முற்றோன்றி மூத்த குடி” (பு. வெ. 35) என்பவாகலின்.

3. தன்னை - தமையன்.

8. வெளிது - வெள்ளிய ஆடை; புறநா.286 : 5, 291 : 2.

9. பாறுமயிர் - விரிந்த மயிர்; புறநா.374 : 3.

10. “ஒருமைந்தன் றன்குலத்திற்குள்ளானென் பதுமுணரான்” பெரிய. திருவாரூர்ச்.

மு. “கன்னின்றான்...ஏறு” (பு.வெ. 176)

வெட்சித்திணைத்துறைகளுள், மறங்கடைகூட்டியகுடிநிலை மகளிர் இயல் கூறியதற்கும் (தொல்.புறத்திணை. சூ. 4, இளம்.) ‘வாள்வாய்த்துக் கவிழ்தல்’என்பதற்கும் (தொல். புறத்திணை. சூ. 5, .) மேற்கோள்.

(279)


1 “வந்த படைநோனாள் வாயின்முலைபறித்து, வெந்திற லெஃக மிறைக்கொளீஇ - முந்தை, முதல்வர்கற் றான்காட்டிமூதின் மடவாள், புதல்வனைச் செல்கென்றாள்போர்க்கு” (பு. வெ. 175)