(கு - ரை.) 1. புறநா.139 : 8, 380 : 9. அகரவீற்று உரிச்சொல் தடவுநிலையென உகரம் பெற்றுவந்ததற்கு மேற்கோள்;தொல்.குற்றியலுகரப். சூ. 78, ந. 2. செந்நாப்புலவீர்: புறநா.107 : 2; "செந்நாப் புலவனியான் செல்கின்றேன்" (தனிப்பாடல்) 4. கண்ணுறை - மேலீடு; புறநா.61 : 5. 5-6. 'பிற' என்னும் இடைச்சொல் அசைநிலையாக வந்ததற்கு மேற்கோள்; தொல்.இடை. சூ. 31, சே; தெய்வச்; ந; இ. வி.சூ. 277, உரை. 5 - 8. புறநா.136 : 20 - 23; "சிரப்பான் மணிமவுலிச் சேரலர் கோன் றன்னைச், சுரப்பா டியான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான், இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்" (தமிழ்நாவலர்சரிதை, 24) 9. தேற்றா என்பது தன்வினைப்பொருளில் வந்தது. மு. புறநா.394 : "சேற்றுக் கமலவயற் றென்னாறை வாணனையான், சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக், களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன், அளிக்குமா றெவ்வா றவன்" (தனிப்பாடல்) பாடாண்டிணைத்துறைகளுள், கொடுப்போரேத்தற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 29, இளம்; சூ. 35, ந. (140)
1 'பொய் கூறாமையிற் செந்நாவென்றார்' என்பர் பின்; புறநா. 148, உரை.
|