திணையும் துறையும் அவை.
ஒளவையார் பாடியது. (இ - ள்.) நிலனே! நீ ஒன்றில்நாடேயாக; ஒன்றிற் காடேயாக; ஒன்றிற் பள்ளமேயாக;ஒன்றின் மேடேயாக; எவ்வாறாயினும் எவ்விடத்து நல்லர்ஆண்மக்கள் அவ்விடத்து நீயும் நல்லையல்லது, நினக்கெனஒரு நலமுடையையல்லை வாழி !-எ - று. தீயநிலனேயாயினும் நல்லோருறையின்நன்றெனவும் நல்ல நிலனே யாயினும் தீயோருறையின்தீதெனவும், தன்னிடத்து வாழ்வோரியல்பல்லது தனக்கெனஓரியல்புடையதன்றென நிலத்தை இழித்துக் கூறுவதுபோலஉலகத்தியற்கை கூறியவாறாயிற்று. 1 ஒன்றோவென்பது, எண்ணிடைச்சொல். |