(கு - ரை.) 1. நாகம் - தேவலோகம் ; பவணலோகமுமாம்; தக்கயாகப் பரணியில், "மலைநாக மார்பர்" (510) என்னும் தாழிசைக்கு இவ்வடி மேற்கோள். பாகு - பகுதி. மண்டிலம் - நாடு. 2. தம - தம்முடையன. 3. நோற்றோர்க்கு ஒழியும் - தவஞ்செய்தோர்க்கே உரியனவாகும். 4. ஏற்ற - யாசித்த. ஈர்ங்கை - குளிர்ந்த கை ; புறநா.258 : 5, 393 : 10. 5. புனல் - தாரை நீர். 4 - 5. "அந்தணர்க், கருங்கல நீரொடு சிதறி" (புறநா. 391 : 4 - 5) 7. நாரரி தேறல் - பன்னாடையால் வடிக்கப்பட்ட கள்ளின் தெளிவை; புறநா. 170 : 12, குறிப்புரை. 6 - 7. "ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்து" (புறநா.24 : 31 - 2) 8. "பரிசிலர்க் கென்று, மருகா தீயும் வண்மை", "இரவலர்க், கருகாதீயும் வண்மை", "இரவலர்க் கருகாது கொள்ளென விடுவை" (புறநா.320 : 16 - 7, 329 : 7 - 8, 359: 15 - 6) 9. மதுரைக்.781 - 2; "தெரிகோதை யந்நல்லாய் தேறீயல் வேண்டும்" (கலித்.98 : 9) ‘வேண்டுமென்பது உம்மீற்றான் வந்ததோர் ஏவல் கண்ணிய வியங்கோள்; வாழ்தல்......வைகல்’ சீவக. 201, ந,; தொல். வினை. சூ. 29, ந,; இ. வி.சூ. 46, 50, 239, உரை, மேற். 12 - 3. "அந்தண ரருங்கட னிறுக்கு, முத்தீ" (புறநா.2 : 22 - 3) என்பதையும் அதன் குறிப்புரையையும், "ஒன்றுபுரி கொள்கை யிருபிறப்பாளர், முத்தீச் செல்வத்து" (சிலப்.23 : 67 - 8) என்பதையும் பார்க்க. 13. காண் தக - அழகுதக. 14. கொற்றம் - அரசவுரிமை. 16 - 8. "இமயத்தீண்டி யின்குரல் பயிற்றிக், கொண்டன் மாமழை பொழிந்த, நுண்பஃ றுளியினும் வாழிய பலவே" (புறநா.34 : 21 - 3); புறநா.371 : 24 - 5. (367)
|