திணை - தும்பை; துறை - தானைமறம். அதியமான் நெடுமான் அஞ்சி (பி -ம். அதிகமானெடுமான் வஞ்சி)யை ஒளவையார் பாடியது. (இ - ள்.) போர்க்களத்தின்கட்புகுதலைப் போற்றுமின், பகைவிர்! போரின்கண் மாறுபட்டு,எங்களுள் வைத்தும் ஒருவீரன் உளன்; ஒருநாள் எட்டுத்தேரைச்செய்யுந் தச்சன் ஒருமாதங்கூடிக் கருதிச் செய்யப்பட்டதொரு1 தேர்க்காலையொப்பன்-எ - று. போரெதிர்ந்து களம்புகலோம்புமின்,எம்முளும் உளனெனக் கூட்டுக. எம்முளுமென்ற உம்மை சிறப்பும்மை. தேர்க்காலோடு உவமை 2விரைவும் திண்மையுமாகக் கொள்க. |