(கு - ரை.) 1. வளை-கைவளையல்.“இவட்கே, அலங்கிதழ்க் கோடல் வீயுகு பவைபோல்,இலங்கே ரெல்வளை யிறையூ ரும்மே”, “ஊழுறு கோடல்போலெல்வளை யுகுபவால்”, கமழ்தண்டா துதிர்ந்துகவூழுற்ற கோடல்வீ, இதழ்சோருங் குலைபோல விறைநீவுவளையாட்கு” (கலித். 7 : 15-6, 48 : 11, 121 : 13-4); வளையுடைந்தன்ன வள்ளிதழ்க் காந்தள்” (மலைபடு. 519);“துணைமலர்க் காந்த ளூழ்த்துச் சொரிவபோற்றோன்றி முன்கை அணிவளை நலத்தோடேங்க” (சீவக.1742) 1-2. காந்தளும் குளவியும் : “இலையடர்தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்தளினவண் டிமிரும்” (ஐந். எழுபது, 3) 3. “பாயும், புலிமுன்னர்ப்புல்வாய்க்குப் போக்கில்” (பழ. 234) மறப்புலி:பதிற். 41 : 7; கலித். 42 : 1; சிலப். 12 :27; சீவக. 752. 5. “ஞாயிற்று முன்ன ரிருள்போலமாய்ந்ததென், ஆயிழை மேனிப் பசப்பு”, “ஞாயிற்றுமுன்ன ரிருள்போல மாய்ந்ததென் ஆயிழையுற்ற துயர்”,“ஆயிழை மடவர லவல மகலப், பாயிருட் பரப்பினைப்பகல்களைந் ததுபோல்” (கலித். 42, 145, 148) 7. சொல்லிய : புறநா. 39 : 1. 8. ஞெமலல் - பரத்தல். 6-9. புறநா. 60 : 7-9, குறிப்புரை. 8-9. ‘வரிமணன்....உண்டோவென்றாற்போலும் உவமப் பொருள்களும் இக்காலத்திற்கு ஆகாவாயின’(தொல். செய். சூ. 80, ந.) 10. எழுமரம் - கோட்டைக்கதவின்உட்புறத்தே குறுக்காகப் போடப்படும் வலியமரம்; புறநா.97 : 8; கணையமரமெனவும் வழங்கும்; “முழுவிறற் கணையம்”(சிலப். 15 : 215) என்பதன் உரையைப் பார்க்க.தாடோய் தடக்கை : புறநா, 59 : 2, குறிப்புரை. 11. வழுவில் வன்கை : “கருனையாற்குழைக்குங் கைகள், வாளமர் நீந்தும் போழ்தின்வழுவழுத் தொழியு மென்றான்” (சீவக. 257) (90)
1. குளவி - மலைமல்லிகை; புறநா.168 : 12, உரை. 2. ‘குளித்த’ என்ற இவ்வுரைக்குரியமூலமாகிய ‘இயங்கிய’ என்பது ‘இங்கிய’ என்றிருக்கவேண்டுமென்று தோற்றுகிறது.
|