(கு - ரை.) 1. "ஏம முரச மிழுமென முழங்க" (புறநா. 3 : 3) 2. சென்றமர் கடத்தல் : புறநா. 66 : 4. யாவது : 62 : 1. 3. வெடிபட்டு - சிதறி. 7. முருகு. 180. 9. நன். சூ. 451, மயிலை. மேற். 10. செல்வுழிச் செல்க : நன். சூ. 163, வி :இ - வி.சூ. 68, உரை, மேற். 10 - 11. நன். 228, மயிலை; இ - வி. சூ. 139, உரை, மேற். 8 - 11. புறநா. 74 : 1 - 2, குறிப்புரை. 12. வாய்புகுகடாம் : "வாயிழி கடாத்த வான்மருப் பொருத்தல்" (கலித். 46 : 3); " நாகம் வாய்வழி கடாத்த தாகி" (சீவக. 753) 11 - 2. வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கி" (மணி. 19 : 21-2) 12 - 3. புறநா. 22 : 6; "வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிறு" (அகநா. 78 : 3 - 4) ; "வரிவண்டார்க்கும் வாய்புகு கடாஅத்த, அண்ணல் யானை" (தொல். களவியல், சூ. 11, ந. "எண்ணியது"); "சுரும்புணக் களித்த புகர்முக வேழம்" (ஐங்குறு. 239); "வரிவண் டோங்குய ரெழில்யானைக் கனைகடாம்" (கலித். 66 : 2 - 3); "தண்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்" (சீவக. 2313) 15. விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்ட புண்; குறள். 776, பரிமேல். மு. வஞ்சித்திணைத்துறைகளுள், 'அடுத்தூர்ந்தட்ட கொற்றம்' என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 7, இளம். (93)
1. இப்பொருள், "நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு, மாற்றாரென்னும் பெயர்பெற், றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே" (புறநா. 26 : 16 - 8) என்பதை நினைப்பிக்கின்றது.
|