(கு - ரை.) 4. குறும்பு - அரண் ; அதிலுள்ளவர்க்கானமையின் ஆகுபெயர். 4 - 7. "மடையமை திண்சுரை மாக்காழ்வேல்", "மாக்காழ் நெடுவேல்" (அகநா. 119, 369); "காழ்மண் டெஃகம்" (மதுரைக். 739; மலைபடு. 129) 6. சுரை - உட்டுளையையுடைய இரும்பு. 8 - 9. புறநா. 3 : 9 - 11, 4 : 10 - 11. ழகரஉகரவீற்றுச்சொற்கள் நீண்டு உகரம் பெறுதற்கு மேற்கோள்; தொல். உயிர்மயங்கு. சூ. 59, ந; இ - வி.சூ. 95, உரை. 8 - 10. "கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை", "பெருங்கதவு பொருத யானை மருப்பின், இரும்புசெய் தொடியி னேர வாகி", "அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற், பிடிமிடை களிற்றிற்றோன்றும்" (அகநா. 24 : 11 - 3, 26 : 6 - 7. 99 : 12 - 3) 11 - 3. புறநா. 98 : 5 - 7. 12. தார் - மார்பு; ஆகுபெயர். 14. "நிலந்திரைத்தானை" (சிலப். 26 : 187); "நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே" (பதிற். விட்டுப் போன பகுதி, 1 : 10) 15. புறத்திணைமாலை பொன்னாற் செய்யப்படல் : புறநா. 22 : 20. 16.புறநா. 4 : 5. 17. "கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும், செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாரின், அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே" (பதிற். 71 : 6 - 8) 18 - 20. புறநா. 51 : 6 - 7. பிணிக்கதிர் - பிணித்தலையுடைய கதிர். செம்மல் - தலைமை. திறை - கப்பம். (97)
1. கதுவாய்போய் - வடுமிக்கு (பெருங். 1. 35 : 166, குறிப்புரை); "அரக்கன் கதுவாய்த் தலைகள்பத் தலறியிடக் கண்டான்", "கதுவாய்த் தலையிற் பலிநீகொள்ளக் கண்டாலடியார் கவலாரோ" (தேவாரம்) 2. தடவென்பதற்கு வளைவெனப் பொருள்கொண்டு, கதிர்க்கனத்தாலே வளைந்த தாளெனலுமாம்; "முடந்தைநெல்" (பதிற், 26; 3, 32 : 13)
|