(கு - ரை.) 1. ‘அம்ம’ என்னும்இடைச்சொல் அசைநிலையாக வந்ததற்கு மேற்கோள்; தொல்.இடை சூ. 27, தெய்வச். 1 - 2. “இந்திரர்க்கும் புகழ்வரிதே”(சீவக. 173) ‘இந்திர குமரர்’ என்பதற்குத் தேவகுமரரென்றுபொருள்கூறி இவ்வடிகளை மேற்கோள் காட்டினர்; சிலப்.16 : 172, அடியார். 2 - 3. “இனியவை பெறினே தனிதனிநுகர்கேம்” (பதிற். 38); “மருந்தே யாயினும்விருந்தோ டுண்க” (கொன்றைவேந்தன்) 4. “அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ,தஞ்ச லறிவார் தொழில்” (குறள், 428); “அறிவதறிந்தடங்கி யஞ்சுவ தஞ்சி, யுறுவ துலகுவப்பச் செய்து- பெறுவதனா, லின்புற்று வாழு மியல்பினா ரெஞ்ஞான்றுந்,துன்புற்று வாழ்த லரிது” (நாலடி. 74) 5 - 6. “வாணன் வைத்த விழுநிதிபெறினும், பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி, ஈதலுள்ளமொ டிசைவேட் குவையே” (மதுரைக். 203 - 5);“அடிபிறக்கிடி லமரர்த முலகொடிவ் வுலகு கைப்படுமெனினுமதொழிபவர்....உயிரை விற்றுறு புகழ்கொள வுழல்பவர்”(கலிங்கத். 340). கலித். 114 : 19 - 21. 8. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளள்” (அகநா. 54; மணி. 5 : 73) 9. “பிறர்க்கற முயலும் பெரியோய்”(மணி. 11 : 63) 8 - 9. “தன்னுயிர்க் கிரங்கான்பிறவுயி ரோம்பு, மன்னுயிர் முதல்வன்” (மணி.25 : 116 - 7); “தனக்கென், றொன்றானு முள்ளான் பிறர்க்கேயுறுதிக் குழந்தான்” (குண்டல. கடவுள்.) மு. பகட்டினானும் ஆவினானும் துகட்டபுசிறப்பிற் சான்றோர் பக்கமென்பதற்கு இச்செய்யுளைமேற்கோள்காட்டி, நோன்றாட் பிறர்க்கெனமுயலுநர் வணிகவேளாளரென்பர் இளம்பூரணர்,(தொல்.புறத்திணை. சூ. 17); ‘உண்டாலம்ம.......உண்மையானே; இது,வகைபட முன்னோர் கூறிய செந்துறைப் பாடாண்பாட்டு;முனிவர் கூறுமாறுபோலக் கூறிப் பரவலும்புகழ்ச்சியுங் கூறாது மறுமைப்பயன் பிறர்க்கு உறுதிபயப்பக் கூறலிற் கைக்கிளைப்புறனாய்ப்பாடாணாயிற்று (தொல். புறத்திணை. சூ. 27, ந.) (182)
|