(கு - ரை.) 1. புறநா. 111 : 1. 2. "ஆளிடுஉக் கடந்து வாளம ருழக்கி, ஏந்துகோட் டியானை வேந்த ரோட்டிய, கடும்பரிப் புரவிக் கைவண் பாரி" (அகநா. 78) 4. மூங்கில் நெல் : "வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல்" (பெருங். 1. 51 : 12); "வெதிர்கண் ணுடைந்து நெல்லுதிரவும்" (யா. வி. சூ. 95, மேற்.); "நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை" (குறிஞ்சிப். 35); "புல்லிலை வெதிர நெல்விளை காடே" (அகநா. 367 : 16) "சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே : இது, விளையுமேயெனற் பாலது, விளையும்மேயென ஒற்றில்வழி ஒற்றை விரித்தவாறு; இதனுட் சிறியவிலை யெனற்பாலது சிறியிலையெனத் தொகுத்தவாறு' (நன். வி. சூ. 155; சங்கர.) 5. "பல்கோட் பலவின் பயிர்ப்புறு தீங்கனி" (கலித். 50. 12) 6. கிழங்கு கீழே தாழவிருத்தலை, வீழ்த்தலென்றல் மரபு; "வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா" (கலித். 39); "கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு" (மதுரைக். 534); "வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும், விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை" (மலைபடு. 127 - 8) 4 - 9. "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார், நிலைக் கெளிதா நீர தரண்" (குறள், 745) 1 - 13. "பேரிசை யுருமொடு மாரி முற்றிய, பல்குடைக்கள்ளின் வண்மகிழ்ப்பாரி, பலவுறு குன்றம் போலப், பெருங்கவி னெய்திய வருங்காப் பினளே" (நற். 253) 15. சுகிர்தல் - சிக்கறவடித்தல். 16. ஒலித்தல் - தழைத்தல், "ஒலிதெங்கின்" (பதிற். 13 : 7) மு. உழிஞைத்திணையின் துறைகளுளொன்றாகிய 'அகத்தோன் செல்வம்' என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 10, இளம்.; சூ. 12, 67, ந. (109)
1. "நீனெய்தாழ் கோதை" (பரி. 11 : 124); "நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை, நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅல்" (மலைபடு. 524-5) 2. "எறும்பி யளையிற் குறும்பல் சுனைய" (குறுந். 12)
|