(கு - ரை.) 1. புறநா. 33 : 21, 262 : 1. 2. அடப்பட்டு - சமைக்கப்பட்டு. துவை - உணவின் விசேடம்; துவையலென்றுங் கூறப்படும். 3. "பல்வளம் பழுனிய" (மணி. 3 : 28) 6. "நீர்வார் கண்ணேன்" (நற். 143); "நீர்வார் கண்ணை" (குறுந். 22 : 1). கண்ணேம் : வினையெச்சமுற்று. தன்மைப்பன்மை வினைக்குறிப்புமுற்று வினையெச்சக்குறிப்பானதற்கு மேற்கோள்; நன். சூ. 350, மயிலை; நன். வி. சூ. 351; இ. வி. சூ. 250, உரை. 7. பெயர் - புகழ். 9. "கலிமயிற் கலாவத் தன்னவிவள், ஒலிமென் கூந்த லுரியவா நினக்கே" (குறுந். 225 : 6 - 7); "கூந்த லணைகொடுப்பேம் யாம்" (கலித். 101); "தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தல் தொடேல்" (சீவக. 1229) (113)
|