(கு - ரை.) 1. புறநா. 105 : 2, 132 : 5; "குவளையம் பைஞ்சுனை" (மலைபடு. 251); "மலிர்சுனைக் குவளைத், தேம்பா யொண்பூ" (அகநா. 308) 2. முழுநெறி - புறவிதழொடிந்தமுழுப்பூ; "கழுநீ ராம்பன் முழுநெறிப் பகைத்தழை" (அகநா. 156); "கழுநீர்ப் பிணையன் முழுநெறி" (சிலப். 2 : 34) 1 - 2. தழை : புறநா. 61 : 1, 340 : 1; "மணிப்பூம் பைந்தழை தைஇ", "மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி, அரிமல ராம்பலோ டார்தழை தைஇ, விழவாடு மகளிர்" (அகநா. 20, 176); "கிளையிதழ் பறியாப் பைவிரி யல்குற், கொய்தழை தைஇ" (குறிஞ்சிப். 101 - 2); "பைந்தழைமா மகளிரொடு" (பட்டினப். 91) "முழுநெறிக்குவளை" (சிலப். 2 : 14) என்பதற்கு, இதழொடிக்கப்படாத குவளையென்று பொருள்கூறி, இவ்வடிகளை மேற்கோள் காட்டினர் அடியார்க்குநல்லார். 1 - 3. "பைஞ்சுனைக், குவளைத் தண்டழையிவள்" (குறுந். 342 : 4-5) 4. கவலை - கவர்த்தவழி; முள்வேலி : "வாழ்முள் வேலி", "இடு முள்வேலி" (பெரும்பாண். 126, 154) 6. "சுரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுமந்த" (பு. வெ. 60) 7. ஈத்திலை - ஈச்சமரத்தின் இலை. 8. ஒய்தல் - செலுத்துதல். புறநா. 70 : 17, குறிப்புரை. ஒழுகை - பண்டியொழுங்கு. 7 - 8. இங்ஙனம் எண்ணுதல் ஒருவகை விளையாட்டு; திமில் முதலியவற்றை எண்ணுதலும் உண்டு; "நிலவுக்குவித் தன்ன மோட்டு மண லிடிகரைக், கோடுதுணர்ந் தன்ன குருகொழுக் கெண்ணி", "உவர்விளை யுப்பி னுழாஅ வுழவர், ஒழுகை யுமணர் வருபத நோக்கிக், கான லிட்ட காவற் குப்பைப், புலவுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி, மடநோக் காயமொ டுடனுப் பேறி, எந்தை திமிலிது நுந்தை திமிலென வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர், திண்டிமி லெண்ணுந் தண்கடற் சேர்ப்ப" (நற். 159, 331); "ஊசன் மேவற் சேயிழை மகளிர், உரல்போற் பெருங்கா லிலங்குவான் மருப்பிற், பெருங்கை மதமாப் புகுதரினவற்றுள், விருந்தின் வீழ்பிடி யெண்ணுமுறை பெறாஅ" (பதிற். 43); "திரையுழந் தசைஇய நிரைவளை யாயமொ, டுப்பின் குப்பை யேறியெற்பட, வருதிமி லெண்ணுந் துறைவனொடு" (அகநா. 190) 9. நோகு - நோவேன்; தன்மை யொருமை வினைமுற்று; ஓ : அசைநிலை. 13. "கால மன்றியு மரம்பயன் கொடுத்தலின்" (மலைபடு, 134); " பருவ மன்றியும் பயங்கொடுப் பறாஅப், பலவு மாவுங் குலைவளர் வாழையும், இருங்கனி நாவலு மிளமா துளமும்" (பெருங். 2 : 20 : 61 - 3); "கால மின்றியுங் கனிந்தன கனி", "தீங்கனி, கால மின்றிக் கனிவது காண்டிரால்" (கம்ப. வனம்புகு 44, நாடவிட்ட. 18) 16 - 8. "ஏந்துகோட் டியானை வேந்த ரோட்டிய, கடும்பரிப் புரவிக் கைவண் பாரி" (அகநா. 78) 19. பொலம்படைக் கலிமா. புறநா. 359 : 14; "பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி" (மலைபடு. 574); "புனையும் பொலம்படைப் பொங்கு ளைமான்" (பு. வெ. 276) (116)
|