(கு - ரை.) 1. “கடுஞ்சினத்தகொல்களிறும்”(புறநா. 55 : 7); “கடாஅஞ் சென்னிய கடுங்கண்யானை” (பதிற். 25 : 2); “கடுஞ்சினத்த களிறு” (மதுரைக்.179) 3. “விளங்குபொன் னெறிந்த நலங்கிளர்பலகை” (புறநா. 15 : 12); “மின்னுந் தமனியமும்வெற்றிரும்பு மொன்றாகப், பொன்னென் பெயர்படைத்தாற்போலுமே” (பெரும்பொருள் விளக்கம்) 8 - 9. இது, படையடுத்ததற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 31, ந. 11. “தாட்டாழ் தடக்கைத் தனிமதிவெண்குடையான்” (பு. வெ. 52) 10 - 11. இவ்வடிகள், ஆக்கக்கிளவிகாரணம் பெற்று வந்தமைக்கு மேற்கோள்; தொல்.கிளவி. சூ. 22, சே. 8 - 11. “மாண்வினைச் சாபமார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை”(பதிற். 90 : 33 - 4) என்பதையும் அதன் உரையையும்பார்க்க. 13 - 4. “மற்று, ஊன்றுவை கறிசோறுண்டுவருந்துமென வந்ததால் எனின், அது பாடமறிந்துதிருத்திக்கொள்க” (தொல். கிளவி. சூ. 46, இளம்.);“அஃதேல், ஊன்றுவை.....அல்லது என்புழி உண்டென்பதுஒன்றற்கே உரிய வினையாகலின் வழுவாம் பிறவெனின்,உண்டலென்பது உண்பன தின்பன எனப் பிரித்துக் கூறும்வழிச்சிறப்புவினையாம்; பசிப்பிணி தீர நுகரப்படும் பொருளெல்லாம்உணவெனப்படுமாகலிற் பொதுவினையுமாம்; அதனான் அதுவழுவன்றென்பது” (தொல். கிளவி. சூ. 47, சே.; இ.வி. சூ. 319, உரை); “ஊன்றுவை....அல்ல தென்புழிநுகரப்படும் பொருள் எல்லாவற்றிற்கும் உண்டற்றொழில்வந்தவாறு காண்க.” (தொல். கிளவி. சூ. 47, ந.);உண்டல் பொதுவினை யென்பதற்கு மேற்கோள் (தொல்.கிளவி. சூ. 42, தெய்வச்.); பல பொருள் விரவின,சிறப்பினால் ஒன்றற்கேற்ற வினைகொண்டதென்பதற்குமேற்கோள்; நன் மயிலை. சூ. 377. 19. “செருமிகு சேஎயொ டுற்ற சூளே”(அகநா. 266 : 21) (14)
1. “கடுங்கண்ண கொல்களிற்றால் என்னும் புறப்பாட்டுள் படைக்கலங்கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க” (தொல். புறத்திணை சூ. 16, இளம்.; சூ. 20, ந.) 2. கணையமரம் - கதவின் உட்புறத்தே குறுக்காகப்போடப்படும் மரம்; “முழுவிறற்கணையம்” (சிலப்.15 : 215, அடியார்.)
|