(கு - ரை.) வெட்சிக்கானம் : குறுந். 209 : 5. 2. மு. புறநா. 157 : 10. 1-2. புறநா. 193 : 1 - 2. 6. மு. மணி. பதி. 32, 4 : 39. 10. புலிகடிமால் : புறநா. 201 : 15, குறிப்புரை. 16. ‘தேற்றகில்லேமென்பது, தேற்றாப் புன்சொ னோற்றிசின்: என்பது போலத்தெளிதற்கண் வந்தது’ (திருச்சிற். 45, பேர்.) கலித். 92 ; 50. 18. “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை” (நற். 112; குறுந். 26); “கருங்காற், பொன்னிணர் வேங்கை”, “கருங்கால் வேங்கை” (நற். 151, 168, 257) 18-20. வேங்கைப்பூப் பரந்த பாறை புலிபோற்றோன்றுமென்பது பின்வருவனவற்றாலும் விளங்கும்: “கருங்கால் வேங்கை வீயுகு துறுகல், இரும்புலிக் குருளையிற் றோன்றும்” (குறுந். 47); “மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின, அழுகை மகளிர்க் குழுவை செப்ப” (பரி. 14 : 11 - 2); “குறவ ரூன்றிய குரம்பை புதைய, வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம், புலிசெத்து” (அகநா. 12); “கருங்கா லின வேங்கை கான்றபூக் கன்மேல், இருங்கால் வயவேங்கை யேய்க்கும்” (திணைமாலை. 26): “நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாக நண்ணி, மறமனை வேங்கை யெனநனி யஞ்சும்” (திருச்சிற். 96); கலித். 38 : 6. 21. தொல். விளிமரபு, சூ. 12, ந. மேற். (202)
|