(கு - ரை.) 2 “கறிவள ரடுக்கத்து”(குறுந். 288); “கறிவளர் சிலம்பில்” (ஐங்குறு.243; சிலப். 28 : 114); “கறியிவர் சிலம்பின்” (அகநா.112 : 14); கலித். 52 : 17. 5-6. “நாளால், உறையெதிர்ந்துவித்தியவூ ழேனல்” (திணைமாலை. 1) 3 - 6. “கிழங்ககழ் கேழ லுழுத சிலம்பிற்,றலைவிளை கானவர் கொய்தனர்” (ஐங்குறு. 270); “கேழலுழுத கரிபுனக் கொல்லை” (ஐந். எழு. 11) 4 - 8. “உய்யாமன் மலைந்துமராருயிரை, மெய்யாக விராமன் விருந்திடவே, கையாரமுகந்துகொ டந்தகனா, ரையாபுதி துண்ட தறிந்திலையோ”(கம்ப. சடாயுவுயிர். 96) 11. சாந்தவிறகு : புறநா. 108 : 1 -2. உவித்தல் : புறநா. 395 : 4. புன்கம் : “புன்கமிதவை பொம்மல் போனகம்” (திவாகரம், ஆறாவது.) 12. “நாறிதழ்க் குளவியொடுகூதளங் குழைய” (புறநா. 380 : 7); “குல்லை குளவிகூதளங் குவளை” (நற். 376); “குறுந்தாட் கூதளியாடியநெடுவரை” (குறுந். 60); “குளவியொடு வெண்கூதாளந் தொடுத்த கண்ணியன்” (முருகு. 191 - 2) 14. ஊராக்குதிரை : புறநா. 158 : 8;குதிரைமலை பிட்டனுக்குரிய தென்பதை, “வசையில்வெம்போர் வானவன் மறவ, னசையின் வாழ்நர்க்கு நன்கலஞ்சுரக்கும், பொய்யா வாய்வாட் புனைகழற் பிட்டன்’மைதவ ழுயர்சிமைக் குதிரைக் கவாஅன்” (அகநா.143 : 10 - 13) என்பதனாலு முணர்க. 11 - 4. “சாந்த ஞெகிழியின், ஊன்புழுக்கயருங் குன்ற நாட” (அகநா. 172 : 12 - 3) 15. நறைநார் - நறைக்கொடியிலிருந்துஎடுத்த நார;் “நறைப்பவர்” (நற். 5); “தண்கமழ்நறைக்கொடி கொண்டு” (ஐங்குறு. 276); “நறைநார்வேங்கைக் கண்ணியன்” (அகநா. 282 : 9 - 10) 18. தமிழகம் : பதிற். 2 - ஆம்பத்தின்பதிகம் : சிலப். 3 : 37; மணி. 17 : 62. 19. புறநா. 53 : 11 - 2. 148 : 6 - 7. (168)
1 ‘பைங்கொடி - பச்சிலைக்கொடி;எல்லாவற்றினும் பசுத்திருத்தலின், பச்சிலை யென்றுபெயர்பெற்றது’ (முருகு. 190, ந.) என்பது இங்கே அறியற்பாலது.
|