(கு - ரை.) 1. வெளிறு-வயிரமின்மை; “இரும்பினை வெளிற்றின் புன்சா யன்ன” (முருகு.312) 1-2. பகைவருடைய காவற்குளங்களைத் தம்முடைய யானைகளாற் கலக்குவித்தமை இவ்வடிகளாற் கூறப்பட்டது, புறநா.15 : 9-ஆம் அடி முதலியவற்றைப் பார்க்க. 3-4. புறநா.33 : 12 - 3; “மறுவில் கற்பின் வாணுதல் கணவன்....மராஅத், துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்”, “செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு, சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை” (முருகு.6-11, 202 - 3); “காரலர் கடம்பன்” (மணி.4 : 49); “கார்க்கடப்பந் தாரெங் கடவுள்” (சிலப்.24 : பாட்டுமடை. ‘நேரிழை’) 5. கூளியர், ஏவல் செய்வோரென்பதற்கு இவ்வடி மேற்கோள்; முருகு.282, ந.; “கொடுவிற் கூளியர் கூவை காணின்” (மலைபடு.422) 7. புலனென்றது, பகைவரிடங்களை. 8-9. பகைவருடைய காவன்மரத்தை அரசர் வெட்டுவிப்பர்; புறநா.36 : 6 - 9, 57 : 10; “கடிகாவி னிலைதொலைச்சி” (மதுரைக்.153); “பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின், முழாவரை முழுமுதறுமியப் பண்ணி” (பதிற்.5-ஆம் பத்து. பதி.); “பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு, வேம்புமுத றடிந்த வேந்துவாள் வலத்துப், போந்தைக் கண்ணிப் பொறைய (சிலப்.27 : 124-6) 10. வெவ்வெரி - விரும்பப்படும் நெருப்பு; வெம்மை - விருப்பம்; என்றது, மடைப்பள்ளித் தீயை. 11. “கனையெரி பொத்தி” (மணி.2:42) 10-11. புறநா.6 : 21-2, குறிப்புரை. 15. “கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம், போர்விளை யிவுளித் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள், வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோல், நீர்விளை சுரிசங் கார்ப்ப நிலநெளி பரந்த வன்றே” (சீவக.433) 16. “ஆலங் கானத் தஞ்சுவர விறுத்த, வேல்கெழு தானைச் செழியன்” (நற். 387 : 7 - 8) 17. புறநா.19 : 3, 41 : 3, “மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி” (பொருந.140); “ஆற்றல், காலனோ டொக்கும்” (பெருங். 1. 36 : 100 - 101); “எண்மரின் வலிய னாய யமன்” (கம்ப.மிதிலை. 107) 20-21. பாழான இடங்களில் வேளைச்செடி முதலியவைகள் உண்டாவது இயல்பு, 19-ஆம் அடி முதலியவற்றிற்கு எழுதப்பட்டிருக்கும் இரண்டாவது பொருள் மிக அருமையானது; அது குறிப்பு என்றும், தொனியென்றும் கூறப்படும். (23)
1 “நல்லிற் சிதைத்ததீ நாடொறு நாடித்தம், இல்லத்தி லாக்குதலால்” (நாலடி, 225)
|