(கு - ரை.) 3-4. சேர சோழர்க்கு ஞாயிறும் மதியமும் உவமை; புறநா. 55 : 4 - 6, 367 : 13 - 4. 5. ஒன்றுமொழி : புறநா.71-3; “தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னும், இன்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலா, நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார், என்பாரை யோம்பே னெனின்யானவ னாகவென்றான்” (சீவக.443);. “நின்னையறி வன்பெரிது நின்முறையு ளாய, கன்னியையொர் காளைபிறனெய்வது கண்டு, மன்னுமண வில்லுள்வயி றாரவயில் கின்றாய்க், கின்னுமுள வோபுதிய வென்றுமிக நக்கான்” (சூளா.அரசியல். 156); “வினையிலென் மகன்றனுயிர் வேறுசெய் வித்தோனைக், குனிசிலையினாளையுயிர் கோறல்புரி யேனேல், மனைவியய லான்மருவல் கண்டுமவள் கையாற், றினையளவு மோர்பொழுது தின்றவனு மாவேன்” (வி. பா.பதின்மூன்றாம்போர். 184) 5-7. வென்ற அரசர் பகைவருடைய முரசைக் கவர்ந்துகொள்ளுதல் மரபு, புறநா.26 : 6 - 7, 72: 8 - 9, 179 : 4; “அரசுபட வமருழக்கி, முரசுகொண்டு களம்வேட்ட....வேந்தே”, “வேந்தர், இன்னிசை முரச மிடைப்புலத் தொழிய.....புறம்பெற்று” (மதுரைக்.128 - 30, 348 - 50); “எழுவர் நல்வல மடங்க வொருபகல், முரசொடு வெண்குடை யகப்படுத்து” (அகநா.36 : 20 - 21) 8. மடை - மூட்டுவாய்; புறநா.150. 8-9. தலைவனது வேலினைப் புகழ்ந்ததற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 17, இளம். 10. உருப்ப : புறநா.237 : 10. 11. மெய் - அறிவு; “விதமுறு வடிவங் கண்டே மெய்யொருப் பட்ட தில்லை” (திருவால.30 : 31). பூசல் - அழுகையாரவாரம்; “கரையாதேனிடு பூசல் கண்டுமொன், றுரையாய்” (கம்ப.கிட்கிந்தா. அரசியல், 8) 13. அறல் - ஆற்றில் நீர் அற்றற்றுச் செல்லுமிடத்துள்ள கருமணல், பகைவருடைய மனைவியர் கூந்தல் களைதலைக் கண்டு இரங்கி இவன் போர் செய்தலைத் தவிர்ந்தானென்பது கருத்து. (25)
1 முறுகிய - மிகுந்த; சீவக.1503; காஞ்சிப். திருநகர். 1.
|