385
வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்பப்
புலரி விடியற் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றினு மிலனே பிறன்கடை
அகன்கட் டடாரிப் பாடுகேட் டருளி
5வறனியா னீங்கல் வேண்டி யென்னரை
நீனிறச் சிதாஅர் களைந்து
வெளிய துடீஇயென் பசிகளைந் தோனே
காவிரி யணையுந் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி யம்பர் கிழவோன்
10நல்லரு வந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத் துறையினும் பலவே.

(பி - ம்.) 6 ‘நிலநதினக குறைந்த சிதாஅர்’, ‘நிலநதினசிதாஅர்’

7 ‘வெளிதுடீஇக்களைந்தோனேபசி’ 8 ‘காவிரியகனையுந்’, ‘காவிரிகனையுந்’ 9 ‘யம்பல்’

திணை - அது; துறை - வாழ்த்தியல்.

அம்பர்கிழான் அருவந்தையை (பி - ம். அம்பலகிழான வெநதையை)க் கல்லாடனார்.


(கு - ரை.) 1. புள் - கோழிச்சேவல் ; பறவைப்பொதுவுமாம் ; “வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும், உயர்சினைக் குடம்பைக் குரற்றோற்றினவே” (புறநா. 397 : 1 - 2)

4. பாடு - ஓசை. 5. வறன் - வறுமை.

6. நீலநிறமுள்ள கந்தையை நீக்கி.

7. வெளியது - வெள்ளாடையை.

8. காவிரியென்றது இங்கே அரிசிலாற்றை. படப்பை - தோட்டம்.

9 - 10. அம்பர் - சோழநாட்டிலுள்ளதோர் ஊர். அருவந்தை - ஓர் உபகாரி ; “கற்ற நாவினன் கேட்ட செவியினன், முற்ற வுணர்ந்த மூதறிவாளன், நாகரிக நாட்டத் தாரிய னருவந்தை”, “நாடே பிறர் நாட்டிற்குவமை யாறே, காலமறிந் துதவுங் காவிரி தானே, ஆடவர் திலக னம்பர் மன்ன, னீடிசைத் தலைவ னருவந்தை”, “வருநற் கங்கை வடதிசைப் பெருமையும், தென்றிசைச் சிறுமையு நீக்கிய குறுமுனி, குண்டிகைப் பழம்புனற் காவிரிப் பெரும்பதி, அம்பர்க்கதிபதி (திவாகரம்) என்பவற்றிற் காவிரியும் அம்பரும் அருவந்தையும் பாராட்டப்பெற்றிருத்தல் காண்க.

(385)