(கு - ரை.) 1. தார்-தூசிப்படை;முன்படை. தொல். புறத்திணை. சூ. 5 : 15; பு. வெ.28. 2-5. புண்ணைத்தோண்டுதலும் கூந்தலைக்கோதுதலும்சீர்தூங்குதலும் பேய்ப்பெண்டிருடைய தொழில்; உணவுகிடைத்த களிப்பால் ஆடினர். 4-5. “இடிக்குரன் முரசின்மு னெழுந்தனளாடி” (பெருங். 1. 37 : 246); “தானேயா டும்பேய்,பறைபெற்றா லாடாதோ பாய்ந்து” (புறத்திரட்டு) 7. புறநா. 9 : 1 - 6. 10. பைஞ்ஞிலம்-தொகுதி; பஞ்ஞிலம்,பஞிலமெனவும் வழங்கும்; “நனந்தலைப் பைஞ்ஞிலம்வருகவிந் நிழலென”, “உண்ணாப்பைஞ்ஞிலம் பனித்துறைமண்ணி” (பதிற். 17, 31) ; வேறுபடு பைஞ்ஞிலம்:“வேறுபல் பெரும்படை” (முல்லை. 43) 12. புறநா. 53 : 5, குறிப்புரை. 13-5. “தயங்கிணர்க் கோதை தன்றுயர்பொறாஅன், மயங்கினன் கொல்லென மலரடி வருடித்,தலைத்தா ணெடுமொழி தன்செவிகேளாள், கலக்கங் கொள்ளாள்கடுந்துயர் பொறாஅள், மன்னவன் செல்வுழிச் செல்கயானெனத், தன்னுயிர் கொண்டவ னுயிர்தேடினள்போற், பெருங்கோப் பெண்டு மொருங்குடன்மாய்ந்தனள்” (சிலப். 25 : 80 - 86); “காதலரிறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகினுயிர்த்தகத்தடங்கா, தின்னுயி ரீவர்.....பத்தினிப் பெண்டிர்”(மணி. 2 : 42-8); “நாடினார் நாடியே நனைவருங் கொம்பனார்,வாடினார் கணவர்தம் மார்புறத் தழுவியே, வீடினார்”(கம்ப. அக்ககுமாரன். 48); பு. வெ. 262. 16-7. “வாடாப் பூவி னிமையா நாட்டத்து,நாற்ற வுணவினுருகெழு பெரியோர்” (மதுரைக். 457- 8) 19. புகழ்வாழ்க : புறநா. 58 : 19. மு. தும்பைத்திணையுள்,வாள்வாய்த்து இருபெருவேந்தர் தாமும் சுற்றமும்ஒருவரும் ஒழியாத்தொகைநிலையென்னுந்துறைக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம். சூ. 17, ந. (62)
1. “பதினெட்டுப் பாடையும் கண்டவர்”(திருமந்திரம்); “முட்டிலா மூவறு பாடை மாக்கள்”(சீவக. 93); “விரவுமொழிக் கட்டூர்” (பதிற்.90 : 30); “ஐம்பதி னிரட்டி யவனச் சேரியும், எண்பதினிரட்டி யெறிபடைப் பாடியும், அளப்பருஞ் சிறப்பினாயிர மாகிய, தலைப்பெருஞ்சேனைத் தமிழச் சேரியும்”(பெருங். 3. 4 : 8-11) 2 பெண்டிர் பச்சையிலை தின்னுதலென்றது,கணவர் இறந்தபின்னர் அவர் மனைவியர் வேளைக்கீரைமுதலியவற்றைத் தின்று கைம்மை விரதங் காத்தலைக்குறிப்பித்தது; புறநா. 246; பு.வெ. 257. இச்செய்யுளிற்கூறப்பட்ட பெண்டிர்; தலையாகு கற்பையுடையாராதலின்தம் கணவரோடு உயிர் துறந்தார்; மணி. 3 : 42-7. 3 ‘நாற்றவுணவு - அவியாகிய வுணவு’ மதுரைக்,458, ந.
|