278
நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மாண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
5முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.

(பி - ம்.) 1 ‘துரறிய’ 4 ‘குலைந்தனனாயி’ 5 ‘முளையறுத்திடு குவன்’ 8-9 ‘காணாவீன்ற’

திணையும் துறையும் அவை.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்(பி - ம். நெச்செளையார், நச்சென்னையார்)


(கு - ரை.) 3. போரில் தோற்றுமீண்டனனென்று.

4. மண்டமர்: புறநா. 213: 1.

5. சினைஇ - சினந்து.

2 - 5. ‘நின்மகன் படையழிந்து......சினைஇ; என்பதுகுடிகோள் பற்றிவந்த வெகுளி, என்னை? தன்மகன் மறக்குடிக்குக்கேடு சூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின்’ (தொல்.மெய்ப்பாடு. சூ. 10, பேர். இ. வி. சூ. 578, உரை)

6. பெயரா - பெயர்த்து: புரட்டிப் பார்த்து.

7. புறநா. 295: 5; செங்களம் - உதிரத்தாற் சிவப்பாகியபோர்க்களம்; “செங்களம் படக்கொன்று” (குறுந்.1). துழவுதல் - கையால் தடவுதல்.

6 - 7. படுபிணம் நீங்காத போர்க்களத்தைச் சூழ்பவளென்றுமாம்;துழவல் - சூழவருதல். “மாதிரந் துழவுங், கவலை நெஞ்சத்து”(புறநா. 174 : 21 - 2)

9. புறநா. 277 : 3 - 4, குறிப்புரை.

8 - 9. ‘ஊகாரம் பின்வரும் தொழிற்கு இடையின்றிவிரைவு உணர்த்தி முன்வருந்தொழிலின்மேல் இறந்தகாலம்பற்றிவரும்’ (தொல். வினை. சூ. 33, தெய்வச். (தொல்.வினை. சூ. 31, ந.; இ. வி. சூ. 246, உரை); செய்யூ என்னும்வினையெச்சம் வினைமுதல் வினை கொண்டு முடிந்ததற்குமேற்கோள்; நன். சூ. 343, மயிலை.; நன். வி.சூ. 344.

(278)