6
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
5கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழு மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம
10பற்ற லிலியரோ நிற்றிறஞ்சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
15தவ்வெயிற் கொண்ட செய்வுறுநன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
20தவ்வெயிற் கொண்ட செய்வுறுநன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
25தவ்வெயிற் கொண்ட செய்வுறுநன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த

(பி - ம்.) 9 ‘தெரிகோற்சமன்போல’ 10 ‘பற்றிலியரே’ 12 ‘யடர்ப்புகர்ச்’ 13 ‘னேஎய்ப்’ 17 ‘பணீஇயரத்தை’ 20 ‘நான்மறை முதல்வ’ 21 ‘வியவுணின்’ 23 ‘சொலிகவத்தைநின்’ 29 ‘மன்னுக’

திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலுமாம்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.

(இ - ள்.) வடக்கின்கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும், தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய 1கன்னியாற்றின் தெற்கும், கீழ்க்கண்ணது கரையைப்பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல்கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும், கீழதாகிய நிலமும் ஆகாயமும் சுவர்க்கமுமென மூன்றுங்கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற்கட்டாகிய நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின்கீழும், மேலதாகிய கோலோகத்தின்கண்ணும் அமையாது உட்கும் புகழுமாகப் பரந்த அளவையுடைய பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய்போல ஒருபக்கம் கோடாதொழிக; நினது 2படை குடிமுதலாகிய கூறுபாடுகள் சிறக்க; போர் செய்தற்கு மாறுபட்ட பகைவர் தேயத்தின்கண்ணே நினது கடல்போலும் படை மேல்விழுந்து உள்புக மிக்குச் சென்று அடர்ந்த புகரினையுடைய சிறுகண்யானையைத் தடையின்றி நேரே ஏவிப் பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையுங் கொண்டு அவ்வரணின்கட் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த நல்ல அணிகலங்களைப் பரிசிலர்க்கு வரிசையின் வழங்கி நினது கொற்றக்குடை முனிவராற்பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதற்குத் தாழ்க; பெரும ! நினது முடி, மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடுவாழ்கவென்றெடுத்த கையின்முன்னே வணங்குக; இறைவ! நினது கண்ணி, நின்பகைவரது நாட்டைச் சுடும் பலமணம் நாறும் புகையுறைத்தலான் வாடுக; நினது சினம், வெளிய முத்தாரத்தையுடைய நின் தேவியருடைய துனித்த ஒளியையுடைய முகத்தின் முன்னர்த் தணிக; வென்று வென்றிமுழுதையும் வியவாது நின்மனத்தே உட்கொண்ட தணியாத வண்மையையுடைய தகுதிமாட்சிமைப் பட்ட குடுமி! குளிர்ந்த சுடரையுடைய திங்களையொப்பவும் சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய கதிரையுடைய ஞாயிற்றையொப்பவும் நிலைபெறுவாயாக, நீ உலகத்தின்மேல் - எ - று.

வடாது (1) என்னும் முற்றுவினைக்குறிப்பைப் பெயர்ப்படுத்தி, பனிபடு நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன்வடக்குமென்க; ஒழிந்தனவுமன்ன.

மேலது துறக்கத்தின் மேலுமென்பார், அதற்கு மேலதாகிய ஆனிலையுலகத்தானும் (7) என்றார். உரு (8) என்பது, இவனாணையாற் பிறரஞ்சும் உட்குடைமை.

அத்தை (23) யும், ஆங்க (25) வும் அசைநிலை.

குடுமி! பெரும! உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றாதொழிக; நிற்றிறஞ் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசின் மாக்கட்கு நல்கி மதியம்போலவும், ஞாயிறுபோலவும் நீ நிலத்தின்மிசை மன்னுக வெனக்கூட்டி வினைமுடிவு செய்க.

தேஎத்து (11) என்பதனுள், அத்தை அசைநிலையாக்கி, தேயம் கடற்படைக்குள்ளே குளிப்பவென்றுரைப்பாருமுளர்.
ஞமன் (9) - யமனெனினுமமையும். அடற்புகர்ச் சிறுகண் யானை (12) யென்று பாடமோதி, கொலையைச்செய்யும் புகரையுடைய யானையெனினும் அமையும்.

ஆகி (8), ஆகவெனத் திரிந்துநின்றது; ஆகியென்பதனைத் திரியாது, நிற்றிறஞ் சிறக்க (10) என்பதனோடு இயைத்துரைப்பாரும் உளர். நின்றிறம், நிற்றிறமென வலிந்து நின்றது.

நகர்வலஞ்செயற்குப் பணியியரென வீடும், ஏந்துகையெதிர் இறைஞ்சுகவென அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியவாறாயிற்று.

இஃது, இவ்வாறு செய்கவென அரசியல் கூறலிற் 3 செவியறிவுறூஉவும், மதியமும் ஞாயிறும்போல மன்னுகவென்றமையான் வாழ்த்தியலுமாயிற்று.


னக்கு இது மேற்கோள்; (தொல். செய். சூ. 92, ந.;) ஆசிரியத்தில் அடிமுதற்கண், ‘வடாஅது’ என உகரவீறாய நேரீற்றியற்சீர்க்கூன் அருகி வந்ததற்கு மேற்கோள்; யா. வி. சூ. 94.

2. “தெனாஅ துருகெழு குமரி யென்னுங் குறிப்பு வினைச்சொல் குறிப்பினானன்றி வினையறியலாகாமையின், வினைக்குறிப்புமொழி” (நன். மயிலை. சூ. 268)

1 - 2. “வடாஅது, தெனாஅதென்பனவும் ஏழாம்வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம்”, “வடாஅது, தெனா அதென்பன ஏழுனுருபின் பொருள்பட வந்தன” (தொல். வினை. சூ. 23. சே. ந.)

3. சகரரால் தோண்டப்பட்டமையின் கீழ்கடலைத் தொடுகடலென்றார்; “தொட்ட பைங்கடற் சூரியன் றோன்றுமுன் றோன்றி” (வி. பா. நிரைமீட்சி. 24)

4. மேல்கடல் பழையதாதலின், தொன்றுமுதிர் பௌவமெனப்பட்டது.

1 - 4. “தென்குமரி வடபெருங்கல், குணகுடகட லாவெல்லை”, (புறநா. 17 : 1 - 2; மதுரைக். 70 - 71)

7. ஆனிலையுலகம் - கோலோகம். இதனியல்பை, சிவதருமோத் தரத்துள்ள கோபுரவியலாலும், “விளங்குநம் முலகின் மேலாம் வைகுந்த

மதன்மேற் கந்தன், வளங்கெழு முலகம் வெற்பின் மாதுலகதனின் மேலாம், களங்கனி யனைய கண்ட னுலகதன் மேலாம் பாங்கர், உளங்கவர் வனப்பின் மேவுங் கோவின துலக மாமே” (காசிகாண்டம், 2 : 29) என்னுஞ் செய்யுளாலுமுணர்க.

8. இவ்வடி அகலக்கவியைக் கொண்டோர் பெறும் பயனுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது; இ. வி. சூ. 940, உரை.

9. “வாண்ஞமற்கு” (சீவக. 251); “ஞெமன்ன், றெரிகோலன்ன” (அகநா. 349 : 3 - 4)

9 - 10. குறள், 118; “செம்பொற்றுலைத், தால மன்ன தனிநிலை தாங்கிய, ஞால மன்னற்கு” (கம்ப. மந்தரை. 19); “ஓர்வுற் றொருதிறமொல்காத நேர்கோல், அறம்புரி நெஞ்சத் தவன்” (கலித். 42 : 14 - 5)

12. ‘கடற்படை குளிப்ப மண்டி’ என்பது, பின்னின்ற மொழி முன்னே மாற்றப்பட்டதற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ.13, ந.

11 - 2. “விரிகடல் வியன்றானையொடு, முருகுறழப் பகைத்தலைச் சென்று” (மதுரைக். 180 - 81)

16. “வரிசை யறிதலோ வரிதே” (புறநா. 121 : 3); “வரிசையறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண். 217)

15 - 6. “ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர், கொள்ளாப் பாடற்கெளிதினி னீயும்” (பதிற். 48 : 5 - 6); “அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்” (பு. வெ. 16); “கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுழந்ததன் றாள்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி” (மதுரைக். 220 - 24); “பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப், புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியும்” (மலைபடு. 71 - 2)

11 - 6. “விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி, நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்” (சிறுபாண். 247 - 8)

17 - 8. “நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலை யொடுபுனைந், திறைஞ்சாச் சென்னி யிறைஞ்சிவலங் கொண்டு” (சிலப். 26 : 54 - 7.)

20. “முனிவர்.......வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப” (கந்த, சூரனரசிருக்கை. 19)

19 - 20. “பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே” (பதிற். 63 : 1)

17 - 20. இவ்வடிகள், செவியுறை வாழ்த்திற்கு மேற்கோள்: (தொல். செய். சூ. 114, பேர்.)

22. “ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக், கொள்ளை மேவலை”, “ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை”, “வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், கனையெரி யுரறிய மருங்கும்” (புறநா. 7 : 8 - 9, 16 : 17, 23 : 10 - 11); “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து, முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு”, “பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கு”, “ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப” (பதிற். 15 : 1 - 2, 25 : 7, 71 : 9 - 10); “செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல, எரிமேய்ந்த கரிவறல்” (கலித். 13 : 1 - 2); “நாடுகெட வெரிபரப்பி” (மதுரைக். 126)

23. அத்தை என்னும் இடைச்சொல் முன்னிலையசையாய் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். இடை. சூ.47. தெய்வச்.; இ. வி. சூ. 276, உரை.

24. “துனிநீங்கி யாட றொடங்கு துனிநனி, கன்றிடிற் காமங் கெடூஉம்” (பரி. 6 : 97 - 8)

25. வென்று அகத்தடக்கல் : புறநா. 77 : 10 - 13.

26. “தண்டாக் களிப்பு” (மணி. 6 : 126)

29. இது, யகரவீற்றுவியங்கோளுக்கு மேற்கோள் : தொல். உயிர். சூ. 8, இளம்.; நன். மயிலை. சூ. 337; நன். வி. சூ. 338; இ. வி. சூ. 239, உரை; மன்னாமை நிலையாமையை உணர்த்துமென்பதற்கு மேற்கோள்; தொல். கிளவி. சூ. 34, ந.

மு. “இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியுறையும் கூறினான், செவியுறைப்பொருள் சிறப்புடைத்தென்று அவன்கருதி வாழ்தல் வேண்டி” (தொல். புறத்திணை. சூ. 35; செய். சூ. 144, ந.)

பாட்டுடைத்தலைவன் பெயரின் ஒருபகுதி இப்பாட்டின் 26 - ஆம் அடியில் அமைந்திருத்தல் காண்க. (6)


உரை. 1 கன்னியாறு : பாண்டிநாட்டைக் கன்னிநாடென்பது இதனாலும் இருத்தல் கூடும்; வேறு கூறுவாருமுளர்; திருவிளை. தடாதகைப். 61

2. படைகுடி முதலியன: குறள், 381

3. செவியறிவுறூஉ : ஒருவுதல், ஒரூஉதல் எனவும் ஒரூஉஎனவும் கூறப்படுதல்போல உறுதலும் உறூஉதலெனவும் உறூஉவெனவும் கூறப்படுமென்பர்; தொல். புறத்திணை. 35, ந.