(கு - ரை.) 3. புறநா. 282 : 3. 4-5. கல் அளை - கல்லாலாகிய குகை.“வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமாலிந்நின்ற, வாடன் முதியாள் வயிற்றிடம்-கூடார்,பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா, இரும்புலி சேர்ந்தவிடம்” (பு. வெ. 54) 5-6. நற்றாய்க்கும் தனக்கும் வேறுபாடின்மையின்,‘ஈன்றவயிறோ விது’ என்று இங்ஙனம் கூறினாள். 6. போர்க்களத்தான்-போர்க்களத்தின்கண்;உருபுமயக்கம். (86)
1. காவற்பெண்டு - செவிலித்தாய்; மணி.7 : 58 : சிலப். 29 : உரைப்பாட்டு மடை.
|