169
நும்படை செல்லுங் காலை யவர்படை
எடுத்தெறி தானை முன்னரை யெனாஅ
அவர்படை வரூஉங் காலை நும்படைக்
கூழைதாங்கிய வகல்யாற்றுக்
5குன்று விலங்கு சிறையி னின்றனை யெனாஅ
அரிதாற் பெருமநின் செவ்வி யென்றும்
பெரிதா லத்தையென் கடும்பின திடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
10இகலின ரெறிந்த வகலிலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே.

திணை - அது; துறை - பரிசில்கடாநிலை.

அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்பாடியது.

(இ - ள்.) நும்முடைய படை பகைவர்மேற்போங்காலத்து அவரது படையாகிய வேல் முதலாயவற்றைஓக்கியெறியும் படைக்கு முன்னே நிற்பை யாகலானும்,அவர்படை அடர்த்துவருங்காலத்து நும்படையினது அணியைத்தாங்கவேண்டி அகன்ற ஆற்றின்கட் குறுக்கே தடுத்துக்கிடக்கின்ற மலையையொப்ப அதனைத் தடுத்துநின்றாயாதலானும்பெரும! நின்னைக் காணலாங்காலம் பெறுதலரிது, எந்நாளும்;எனது சுற்றத்தினது இடும்பை பெரிதாதலால் நீ இப்பொழுதேஎனக்குப் பரிசில் தந்துவிடுவாயாக; வென்றிவேலையுடையஇளைய பல கோசர் விளங்கிய படைக்கலங்கற்பார்மாறுபட்டனராயெறிந்த அகன்ற இலையையுடையமுருக்காகிய பெரிய மரத்தாற் செய்யப்பட்ட தூணமாகியஇலக்கைப்போலப் பொருவார்க்குத் தொலையாதநினதுவென்றி வாழ்வதாக-எ - று.

‘எனா’ என்பன, எண்ணிடைச்சொல்.

‘எளிதாலத்தை’ என்றுபாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 4 - 5. புறநா. 284, 330;“வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத், தொன்னாரோட்டிய செருப்புகன் மறவர்” (மதுரைக். 725 -6); “வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன்றாங்கிய பெருமையானும்” (தொல். புறத்திணை.சூ. 8); “பொருபடையுட் கற்சிறைபோன், றொருவன்றாங்கிய நிலையுரைத்தன்று” (பு. வெ. 54)

8. புறநா. 136 : 24. 6 - 8. புறநா.139 : 6 - 15.

9. “கோசர் - ஒருவகைவீரர்; புறநா.283, 396; “நாலூர்க்கோசர் நன்மொழி”, “ஒன்றுமொழிக் கோசர்” (குறுந். 15, 73); “மெய்ம்மலிபெரும்பூட் செம்மற் கோசர்”, “வடுவுடை முகத்தர்,கடுங்கட்கோசர்” “காப்புக்கை நிறுத்த பல்வேற்கோசர்”, “ஒன்று மொழிக் கோசர்”, “வாய்மொழிநிலைஇய சேண்விளங்கு நல்லிசை, வளங்கெழு கோசர்”,“பல்லிளங் கோசர்”, “புனைதேர்க் கோசர்”,“ஊர்முது கோசர்” (அகநா. 15, 90, 113, 196, 205,216, 251, 262); “அவையகம் விளங்க, நான்மொழிக் கோசர்”,“கடந்தடு வாய்வாளிளம்பல் கோசர்” (மதுரைக்.508 - 9, 773); “கொங்கிளங் கோசர் - குறும்புசெலுத்துவார் சிலவீரர்” (சிலப். உரைபெறு. 2,அரும்பத.) என்பவை இங்கே அறியற்பாலன.

10. முருக்கு - முள்ளு முருங்கை.

9 - 11. புறநா. 4 : 6, குறிப்புரை.; சீவக.995, ந.

(169)