திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்பாடியது. (இ - ள்.) இன்று போகினும்தருவன;் சிறிதுநாட் கழித்துப் போகினும் தருவன்;பின்னையும் முன்னே தந்தேனென்னாது பயின்று நாடோறும்செலினும் பொய்யானாகி யாம் வேண்டினபடியே எம்முடையவறிய கலத்தை நிரப்புவோன்; தான் விரும்பினபடியேதன்னுடைய அரசன் உவப்பச் செய்தற்கரிய போர்த்தொழில்களைமுடிப்பானாக, திருந்திய வேலையுடைய கொற்றன்; இனமாகியமிக்க வெவ்விய சேக்களைத் தொழுவோடே (கொட்டிலோடே) வேண்டினும் களத்தின்கண் மலிந்த நெல்லின் குவையைவேண்டினும் பெறுதற்கரிய அணிகலங்களைக் களிற்றுடனேவேண்டினும், பெரிய தகைமையை யுடையான், பிறர்க்கும்அத்தன்மைய அறஞ்செய்யுங் கூற்றையுடையான்; அத்தன்மையனாதலால்,எம்முடைய இறைவனது உள்ளடிக்கண் முள்ளும் உளப்படநோவச் சென்று உறா தொழிய வேண்டும்; ஈவோர் அரிதாகியஇவ்வுலகத்தின்கண் உயிர்வாழ்வோர் வாழும் பரிசுஅவனது தாள் வாழ்வதாக-எ - று. பிறர்க்குமென்பது, எச்சம். தில்: விழைவின்கண் வந்தது. திருந்துவேற் கொற்றன், பெருந்தகை,சேக் களனொடு வேண்டினும், நெல்லின் குப்பை வேண்டினும்,அருங்கலம் களிற்றொடு வேண்டினும் நமக்கே யன்றிப்பிறர்க்கும் அத்தன்மைய அறஞ்செய்யும் தகுதியையுடையன்;யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன்;தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப அருந்தொழில்முடிப்பானாக வேண்டுவது; எந்தை உள்ளடி முள்ளும்நோவவுறாற்க; வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவெனக்கூட்டுக. ‘வாழ்வோர் வாழ்வு’ என்றோதி,வாழ்வோர் வாழும் வாழ்வெல்லாம் அவன் தாள்வாழ்கவென்றுரைப்பினும் அமையும். தாளை முயற்சியெனினும் அமையும். |