(கு - ரை.) 1. கிழவனை : ஐ முன்னிலைக் கண்வந்தது. 2. “கோடுபல முரஞ்சிய கோளி யாலத்து” (மலைபடு. 268) ‘கோளி - பூவாது காய்க்கும் மரம்; என்னை? கோளியாலத்து என்றார்’ (சிலப். 16 : 22-8, அடியார்.) 2-5.“சிதலை தினப்பட்ட வால மரத்தை, மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக், குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற, புதல்வன் மறைப்பக் கெடும்” (நாலடி. 197); “தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன, ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர், தாங்கல் கட னாகும்” (சீவக. 498) 4-5. “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” (பதிற். 32-7) 6-7. அராவெறியும் உரும் : புறநா. 17 : 38-9, குறிப்புரை; 37 : 1-4, குறிப்புரை; 126 : 19; 366 : 3. 7-8. “நரையிருமி னேறனையை” (மதுரைக். 63) 6-8. “இளைய ராயினும் பகையரசு கடியும், செருமாண் டென்னர்” (சிலப். 4 : 21-2); “மழைதவழும் பெருங்குன்றத்துச், செயிருடைய வரவெறிந்து, கடுஞ்சினத்த மிடறபுக்கும், பெருஞ்சினப்புயலேறனையை” (பதிற். 51 : 25-8) 9.புறநா. 39 : 8-9, குறிப்புரை. 10.புறநா. 70 : 9. 186 : 1. 13. “செழியன், தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை” (சிறுபாண். 65 - 7); “மலையாத, தண்டாரான் கூடற் றமிழ்” (மதுரைக். இறுதிவெண்பா.) 11-3. “சீர்மிகு சிறப்பினோன் றொல்குடிக் குரித்தெனப் பார்வளர். முத்தமொடு படுகடல் பயந்த, ஆர்கலி யுவகையர்” (கலித். 105 : 3-5) 15. “நீனிற வுருவி னெடியோன்” (பெரும்பாண். 402); “மேனி நெடியோன்” (சிலப். 5 : 172) 14-5.புறநா. 56 : 3-6, குறிப்புரை; நற். 32 : 1 - 2. 14-6. “மன்புன லிளவெயில் வளாவவிருள் வளர்வெனப். பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே” (பரி. 15 : 27-8) 18. இன்னீர்-இத்தன்மையையுடையீர். 25. “பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது” (மதுரைக். 192) 28. “இன்றை யன்ன நட்பு” (குறுந். 199). “புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா, னட்பாங் கிழமை தரும்” (குறள், 785) என்பதன் உரையில், ‘புணர்ச்சி-ஒருதேயத்தாராதல்; இன்றே போல்கநும் புணர்ச்சி யென்றதும் அதனை’ என்பர் பரிமேலழகர். 29.புறநா. 158 : 28, 309 : 7. 30-32. அரசர் தாம்வென்ற நாட்டிலுள்ள மலையில் தம் கொடியை எழுதுவித்தல் மரபு; “கயலெழுதிய விமயநெற்றி” (சிலப். 17 : 1. உரைகள்); “பருப்பதத்திற் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல்” (பெரியாழ்வார்திருமொழி); “நககோடி பலகோடி புலியேறு தனியேற”, “பொறைசூழ் வரையிற் புலியே றெழுதும்” (தக்க. 4, 185, குறிப்புரை.) குயின்ற வென்னும் அடையடுத்தமையால், தொடுபொறி யென்பது பெயர் மாத்திரையாய் நின்றது. தாமிருக்கும் நாட்டரசனாதலின் காரிக்கண்ணனார் சோழனையே முன்னிலையாக்கிக் கூறினார். (58)
1. (29 - 32. பரி. 3 : 17 - 8, பரிமேல். மேற்) 2. புறநா. 380; “தன்கடற் பிறந்த முத்தி னாரமும், முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத் தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தி னாரமும்......அணியும்.......தென்னவன்” (அகநா. 13); “குடமலைப் பிறந்த வாரமு மகிலும், தென்கடன் முத்தும்” (பட்டினப். 188 - 9); “தென்கடன் முத்துந் தென்மலைச் சந்தும்”, “கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு, தெக்கண மலயகச் செழுஞ்சே றாடி”, “கோவா மலையாரங் கோத்த கடலாரம்” (சிலப். 8 : 19, 14 : 80 - 1, 17; “உள்வரி”); “வெண்டிரைத் தென்கடன் முத்துந் தென்மலைச் சந்தும்” (தஞ்சை. 93) 2. “முரைசுமூன் றாள்பவர் முரணியோர் முரண்டப” (கலித். 132); முரசு மூன்றாவன- வீரமுரசு தியாகமுரசு நியாயமுரசென்பன; தன் முரசும் சேரன்முரசும் சோழன்முரசுமென மூன்றெனலுமாம்” (கலித். 132., உரை); “மன்றல்பே ருதவி வலனுறு வெற்றியால், முன்றிலின் முழங்கு மூவகை முரசும்” (சரபேந்திர. குற. 30 : 35 - 6) 3. “பொதுக்கொண்டகவ்வை” (கலித். 66 : 11) என்புழி, பொது என்பதற்குச் சிறப்பில்லாமையென்று நச்சினார்க்கினியர் எழுதியவுரையும் “இவை பதினாறும் சிறப்பின்மையிற் பொதுச்சீரென்பது காரணக்குறி; பொது சிறப்பின்மையைச் சொல்லுமோவெனிற் சொல்லும்; என்னை? புலமிக் கவரைப் புலமை தெரிதல், புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க, பூம்புன லூர பொதுமக்கட் காகாவாம், பாம்பறியும் பாம்பினகால்’ இதனுட் பொதுவைச் சிறப்பின்மைக்கட் புணர்த்தார் சான்றோராதலின்” (யா. வி. சூ. 13, உரை) என்பதும் இங்கே கூறிய உரையை வலியுறுத்தும். 4. ‘குன்றகெழு நாடென்றாராயினும் நாடுகெழுகுன்றென்பது கருத்தாயினாற்போல’ (பரி. 3 : 17 - 8, பரிமேல்.) 2. பொறித்த எனப் பின்வருதலின் இங்ஙனம் உரையெழுதினர்; புறநா. 54 : 10.
|