(கு - ரை.) 1. ‘முழக்கு’ என்பதுஒலித்தற்றொழிற் பண்பை உணர்த்துதற்கு மேற்கோள்;நன். மயிலை. சூ. 458; நன். வி. சூ. 459. 5. “பல்வெள்ள மீக்கூற, வுலகமாண்ட வுயர்ந்தோர் மருக” (மதுரைக். 23 - 4);“அடையடுப் பறியா வருவி யாம்ப, லாயிர வெள்ளவூழி,வாழி யாத வாழிய பலவே” (பதிற். 63 : 19 - 21) 9. “ஆர லீன்ற வையவி முட்டை”(புறநா. 342 : 9) 10. கெடிறு: “இன்கெடிறு சொரிந்தவகன்பெரு வட்டி”, “காக்கை, இருங்கழி யினக்கெடிறாருந் துறைவன்” (ஐங்குறு. 47, 167) 11. வடி - திருத்தம்; “வடித்தேர்த்தானை” (மணி. 15 : 62) 14 - 5. “வார்சான்ற கூந்தல் வரம்புயரவைகலு, நீர்சான் றுயரவே நெல்லுயருஞ் - சீர்சான்ற,தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும், ஓவாதுரைக்கு முலகு” (சிறுபஞ்ச. 46) 16. புறநா. 50 : 14 - 5. 18. “நீரின் றமையா துலகு” (குறள்,20) 18 - 9. “மண்டிணி ஞாலத்துவாழ்வோர்க் கெல்லாம், உண்டி கொடுத்தோருயிர்க்கொடுத் தோரே” (மணி. 11 : 95 - 6) 20. “மக்கள் யாக்கை யுணவின்பிண்டம்” (மணி. 10 : 90) “இசைபடவாழ்வதற்குக்கல்வி ஆண்மை முதலிய பிறகாரணங்களும் உளவேனும் ‘உணவின்பிண்ட முண்டி முதற்று, ஆதலின் ஈதல் சிறந்தது என்பதற்குஞாபகமாக ஈதலென்றார்” (குறள், 231, பரிமேல்.) 24. “வானோக்கி வாழு முலகெல்லாமன்னவன், கோனோக்கி வாழுங்குடி” (குறள். 542) 28 - 9. “குளந்தொட்டு வளம்பெருக்கி”(பட்டினப். 284) (18)
1 “சங்குதரு நீணிதியஞ் சாலவுடைநாய்கன்” (சீவக. 493) 2 புறநா. 28 : 15
|