(கு - ரை.) 1. ‘இமிழ்’ என்பதுஒலித்தற்றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்;நன். மயிலை. சூ. 458; நன். வி. சூ. 459. கிடக்கை- பூமி; “ஞாலந்தாத்திரியளக்கர் நாடுபூ தலங்கிடக்கை”என்பது நிகண்டு. 1 - 2. “இமிழ்கடல்.......தலையாலங்கானத்துஎன்றவழித் தலையாலம் என ஆசிரியவடியுள் இன்சீர்இயைய வெண்சீர் வந்தது” (தொல். செய். சூ. 30,பேர்.; ந.) 4. பெயரெச்சத்திற்கு முடிபாகியபெயரை இடைவருஞ்சொற்கள் விசேடித்து நின்றதற்கு மேற்கோள்;தொல். எச்ச. சூ. 59, ந. 3 - 4. “எருமைக் கடும்பரி யூர்வோனுயிர்த்தொகை, ஒருபக லெல்லையி னுண்ணு மென்ப,தாரிய வரச ரமர்க்களத் தழிய, நூழிலாட்டிய சூழ்கழல்வேந்தன்”, “கூற்றுக்கண் ணோட வரிந்துகளங்கொண்டோர்”(சிலப். 26 : 215 - 8, 27 : 40) 5 - 6. தினையுண் கேழ லிரியப்புனவன், சிறுபொறி மாட்டிய பெருங்கல் லடாஅர், ஒண்கேழ்வயப்புலி படூஉ நாடன்” (நற். 119); “புழைதொறுமாட்டிய விருங்க லரும்பொறி” (மலைபடு. 194);“கொல்புலி படுக்கும் பெருங்கனீ ளடார்வெங் குறவர்வீழ்த்திடுதலும்” (கூர்ம. சம்புத்தீவின், 29); “பண்ணேறுசிறுகுதலைக் கொடிச்சியருட் பதைபதைத்து நடுங்க வெய்ய,திண்ணேறுங் கொடுஞ்சினத்த செங்கண்வாலுளைமடங்கற்சிதர்ந்து வீழ, விண்ணேறு மமரருளம் வியப்பூரக் கல்லதரின்வீழ்த்தி விண்டு, தண்ணேறு மலர்த்தொடையற்குறவருறை வாமனமாந் தகைசால் குன்றும்” (இலிங்க.பிலக்கமுதலான தீவு. 54) 8 - 9. யானையின்மேல் தைத்த அம்புகளுக்குமலைமீது தங்கிய குருவிகள் உவமை; “யானைமேல்யானை நெரிதர வானாது, கண்ணேர் கடுங்கணை மெய்மறைப்பவெவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றனவே”(களவழி. 8); “கணைமொய்ப்பக் கதஞ்சிறந்து.குருவிசேர் வரைபோன்ற குஞ்சரம்” (சீவக.2237); “கோல்பொரக் குளித்த யானை குருவிசேர்குன்ற மொத்த” (மேருமந்தர. பலதேவர். 15) 11. “உறலூறு கமழ்கடாத் தொல்கியவெழில்வேழம். வறனுழு நாஞ்சில்போன் மருப்பூன்றிநிலஞ்சேர” (கலித். 8); “பிடிவா யன்ன மடிவாய்நாஞ்சில்” (பெரும்பாண். 199. கு - ரை.) 9-12. “மின்னவி, ரோடையொடு பொலிந்தவினைநவில் யானை. நீடிர டடக்கை நிலமிசைப் புரளக்களிறுகளம் படுத்த” (நெடுநல். 168 - 71) 14. ‘இன்ன’ என்பது உவமவுருபாக வந்ததற்குமேற்கோள்; நன். மயிலை. சூ. 366. 15. மூதிற் பெண்டிர்-மறக்குடிமகளிர்;“மூதிற் பெண்டி ரோதையிற் பெயர” (சிலப்.5 : 75); “கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தேவாளோடு. முற்றோன்றி மூத்த குடி” (பு. வெ. 35) 13-6. புறநா. 278; மறக்குடிமகளிர்.தம்முடைய தந்தை முதலியவர்கள் போர்க்களத்தில்இறந்ததுகண்டு இன்புறுதல். “கன்னின்றானெந்தைகணவன் களப்பட்டான். முன்னின்று மொய்யவிந்தாரென்னையர் - பின்னின்று.
1 “தலைப்பெருஞ் சேனைத் தமிழச்சேரி”(பெருங். 3. 4 : 10 - 11) ; தமிழ்ப்படை - தமிழ் நாட்டரசர்களினசேனை; நெடுஞ்செழியனோடு பொருத பகைவரெழுவரும் தமிழ்நாட்டினராதலின்தமிழ்ப்படை யென்றார்.
|