338
ஏர்பரந்தவய னீர்பரந்த செறுவின்
நென்மலிந்தமனைப் பொன்மலிந்தமறுகிற்
படுவண் டார்க்கும் பன்மலர்க் காவின்
நெடுவே ளாதன் போந்தை யன்ன
5பெருஞ்சீ ரருங்கொண் டியளே கருஞ்சினை
வேம்பு மாரும் போந்தையு மூன்றும்
மலைந்த சென்னிய ரணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினுந் தற்றக
வணங்கார்க் கீகுவ னல்லன்வண் டோட்டுப்
10றுணங்குகல னாழியிற் றோன்றும்
ஓரெயின் மன்ன னொருமட மகளே

(பி - ம்.) 1. ‘ஏர்பரந்த வயலின்’ 2 ‘நென்மலையிற்’ ‘டார்க்குங் காவிற்பஃளி’, ‘டார்க்குங்காவிற்பஃறுளி’ 4நெடுவேலாதன்’ 7 ‘செனனியாரணிந்த’ ‘சென்னியர்குனிந்த’ 11 ‘றுணங்குகனாழியிற’ ‘றுணங்குகராழியிற்’

திணையும் துறையும் அவை.

குன்றூர்கிழார்மகனார்.


(கு - ரை.) 4. போந்தை - ஓரூர்.

5. கொண்டிச்சீரள் - மிகுதியான சீரையுடையவள் ; "அன்பதாய்க், கொண்டி யாயின வாறென்றன் கோதையே" (தே. திருநா. திருவாரூர். ‘கொக்கரை’ 7)

6. ஆர் - ஆத்தி. போந்தை - பனை.

5 - 6. கருஞ்சினைவேம்பு : "கருஞ்சினை, யரவாய் வேம்பு" (பொருந.143 - 4)

8. கொற்றம் - அரசுரிமை. தற்றக - தனக்குத் தக.

6 - 9. விரும்புவோர் பாண்டியன்முதலிய முடிமன்னர் மூவராயிருப்பினும் தன்னை வணங்கார்க்குத் தன்மகளை ஈவானல்லன் இவன்.

10. கதிர் - நெற்கதிர்.

11. உணங்குதல் - உலர்தல். கலன் - கப்பல். ஆழி - கடல்.

12. எயில் - மதில். ஓரெயின்மன்னன் : அகநா.373 : 18.

10 - 12. சூழ்ந்த கழனிக்குக் கடலும் எயிலுக்குப் புறமுலர்ந்த கப்பலும் உவமம். ‘மருதநிலத்து மதிலாதல்........அகநாடுபுக்கவரருப்பம் வௌவி எனப் பாட்டிற்கூறியவாற்றானும், பிணங்குகதிர்க் கழனி........ மன்னனென்றமையானும்......உணர்க’ (தொல். புறத்திணை. சூ. 9, ந.)

(338)