(பி - ம்.) 2 ‘மாறாஅர்’ 6 ‘துயந்திசினோரே’, ‘துயர்ந்திசினோரே 10 ‘பிறப்பின் வன்மையுங்” திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி. அவன் 1வடக்கிருந்தான் சொற்றது (இ - ள்.) அறவினையைச்செய்வேமோ அல்லேமோவென்று கருதி ஐயப்பாடு நீங்கார் அழுக்குச்செறிந்த காட்சிநீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்; யானைவேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும் (பி-ம். கூட்டும்); அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப் பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்; மாறிப்பிறவாரென்று சொல்லுவாருள ராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது 2 புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும் நல்வினைசெய்தல் அழகிது-எ - று. உயர்ந்திசினோர்க்கென்னும் நான்காவதன்றியும் உயர்ந்திசினோர் செய்வினைமருங்கின் எய்தலுண்டெனின், இவர்க்கு நுகர்ச்சிங்கூடுமென்று உரைப்பினும் அமையும். ‘பிறவாராயினும்’ என்னும் உம்மை அசைநிலை; உம்மையின்றி ஓதுவாரும் உளர். ‘காட்சியொடு நீங்கா நெஞ்சத்து’ என்பதூஉம் பாடம். |