(கு - ரை.) 2. வட்டி - கடகப்பெட்டி; அதாவது பனை அகணியாற் செய்த பெரிய பெட்டி; “ஊனார் வட்டியார்” (மலைபடு.152). ஆய்-இடைச்சாதி; சீவக.426, ந. 5. சீவக.355; நாலடி.191; நான்மணிக்.83. 6. பலர்பாற்படர்க்கை வினைமுற்று வினையெச்சமானதற்கு மேற்கோள்; நன்.சூ. 350, மயிலை;நன்.சூ. 351. வி. 1-6. “முள்ளெயிற்றுப் பாண்மக ளின்கெடிறு சொரிந்த, வகன்பெரு வட்டி நிறைய மனையோள், அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூர”, “வளைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள், வராஅல் சொரிந்த வட்டியுண் மனையோள், யாண்டுகழி வெண்ணெ னிறைக்கு மூர” (ஐங்குறு.47, 48) 7. மு. புறநா.215 : 6. 8. ஏழெயிற்கதவம் - (பகைவருடைய) ஏழுமதிலின்கணுள்ள கதவுகள்; பாண்டிநாட்டில் ஏழு பொன்கோட்டையென்று ஓர் ஊர் உள்ளது; சிவகங்கையைச் சார்ந்தது; அஃது இங்கேகூறிய ஏழெயிலிருந்த இடமாக ஊகிக்கப்படுகின்றது; அந்தவூர், பல சிற்றரண்கள் வாய்ந்திருந்ததாக இந்நூல் 21-ஆவது செய்யுளிற் கூறப்பட்டுள்ள கானப்பேருக்கு(காளையார் கோவிலுக்கு)ச் சமீபமாக இருத்தல் இக்கருத்தை ஒருவாறு வலியுறுத்தும். 9. பகைவருடைய இடங்களைக் கைப்பற்றியவுடன் அவற்றில் அவர்களுடைய முத்திரைகளைச் சிதைத்துத் தம்முடைய பொறிகளை அமைப்பது மரபு. 11. புறநா.311 : 3, குறிப்புரை. “தாதெருத் ததைந்த முற்றம்” (மலைபடு.531) 12. ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் வினைமுதல் கொண்டதற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 343; நன். வி.சூ. 344. 13. “மாலைப் பந்தும் மாலையு மேந்தி” (சீவக.2928) 12-3. புறநா.23 : 3. 14. புறநா.177 : 14 - 5; “கோழூன்குறைக் கொழுவல்சி” (மதுரைக்.141)‘ஊணமலைச் சிறுகுடி’ (கலித். 50) என்பதற்கு ‘ஊன்சோற்றமலை பாண்கடும் பருத்தும்’ என்பது மேற்கோள். 16. வரிவனப்பு : மணி.3 : 8. 16-7. வல்லோன் றைஇய.....பாவை : கலித்.56 : 7. 20. பள்ளி : மணி.26 : 72. 21. மைவிடை வீழ்த்தல் : புறநா.262 : 1, குறிப்புரை. (33)
1. அல்லியக்கூத்து : சிலப், 6: 48, அடியார், 2. ‘தனியவரை முனிவு செய்யும் பொழில்’ (இறை. சூ. 2, உரை) 3. சிறுசோற்றுவிழவு - சோற்றைத் தயிர்முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்
|