(கு - ரை.) 1. கொண்டி - பொருளின்மிகுதி ; "கொண்டி பெறுகென் றோனே" (புறநா.390 : 23) 2. மலிர் - நீரூற்று; "மணலாடு மலிர்நிறை" (ஐங்குறு. 15) 3. பொருநன் - உவமிக்கப்படுபவன்; "போர்மிகு பொருந" (முருகு. 276) ; "வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" (மதுரைக். 42) ; அரசனுமாம். 5. பொருநரேம் - பொருநராக உள்ளேம். 6. பிறரைப் பாடி. 7. வாழியவென அவனைப்பாடுவேம். 9. சோற்றான் - சோற்றோடு. 12. ஏழ்மணி - எழுச்சியையுடைய மணி. உத்தி - படப்பொறி. 13. கட்கேள்வி - கண்ணாற்கேட்டல். கவைநா - பிளவுப்பட்ட நாக்கு. 15. வறன் - வறுமை. வழங்கு வாய்ப்ப - பிறர்க்கு யாம் கொடுத்தல் கைகூடும்படி. 14 - 5. வறுமைக்கு அராவின் விடம் உவமம். 16. மதியும் அத்தையும் அசைநிலைகள். தோன்றல் : விளி. 17. நினதாகிய உலகு அறிய. 18. கிடைக்காழ் - நெட்டியின் காம்பு. எனதாகிய கிணையென்க. 18 - 9. கிணையினிடத்து அதனையடிக்கும் சிறுகோல் கட்டப்பட்டிருக்கும் ; "நுண்கோற் சிறுகிணை" (புறநா. 383 : 3) 21. கேட்டொறும் - கேட்குந்தோறும். 18 - 21. ஒப்பு. நற்.100 : 10 - 12. 22. வென்ற தேர் - ஏனையோரை வென்ற தேரையுடைய. பிறர் - அயலரசர். வேத்தவையான் - இராசசபைக்கண். அறிய (17) ஏத்துவென் (21) (382)
|