(கு - ரை.) 1 - 3. “செயிரிற் குறைநாளாற் பின்சென்று சாடி, உயிருண்ணுங் கூற்றமும் போன்ம்” (கலித். 105 : 37 - 8); “உண்ணுந்துணைக் காக்குங் கூற்று”, (பழ. 89); “ஞாலத் தின்னுயிர் வாழ்வோர் நாப்பட், காலம் பார்க்குங் காலன் போல” (பெருங். 1. 37 : 204 - 5); “சாற்றுநா ளற்ற தெண்ணித் தருமம்பார்த், தேற்றும் விண்ணென்ப தன்றி யிவளைப்போல், நாற்றங் கேட்டலுந் தின்ன நயப்பதோர், கூற்றுண்டோ” (கம்ப. தாடகைவதை. 64) ‘அடல்வேண்டினாற்றுபவர்கண்’ என்பதற்கு வேற்றுவேந்தரைக் கோறல் வேண்டியவழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டு எனப் பொருள்கூறி இப்பகுதியை மேற்கோள்காட்டினர்; குறள். 893, பரிமேல். 9 - 10. களிறென்றது பன்றியை உணர்த்திவருதற்கு இப்பகுதி மேற்கோள் ; சிலப். 15 : 95 - 106, அடியார். “மிக்க வெயிற்றின கொம்பின பன்றி விறற்குரங்கு, தொக்கன தம்மைக் கனவினிற் காணிற் சுடர்மகுடச், சக்கர வர்த்திக ளாற்பயமுண்டெனுந் தம்முயிர்கள், உக்கன வாதல்செய் தாற்பொரு டேயும் பயமுடைத்தே” (கனாநூல், 15) 14 - 5. மனைவியர்க்குத் தமது வருத்தம் தோன்றாமல் கணவர் மறைத்தலை, “கருங்கய னெடுங்கட் காதலி தன்னை....வருபனி கரந்த கண்ண னாகி” (சிலப். 16 : 94 - 7) என்பதனாலும் அறிக. 6 - 16. “பிறவும்.....தானே” : தோற்றோர் தேய்விற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 7, இளம். 16 - 7. கலக்குற்றன்று - கலக்கமுற்றது. ‘காற்றும் நெருப்பும் கூடி னாற்போலும்’ என்பது ஒரு பழமொழி. மு. நிமித்தம்பற்றி வந்ததற்கும் (தொல். புறத்திணை. சூ. 30, இளம்.), பாடாண் கொற்றவள்ளைக்கும் (தொல். புறத்திணை. சூ. 34, ந.) ஓம்படை வாழ்த்திற்கும் (தொல். புறத்திணை. 36, ந.) மேற்கோள். (41)
1. களிறு - பன்றி; தொல். மரபு. சூ. 34.
|