(பி - ம்.) 1 ‘இகவலர்க்காணின்’ திணை - அது; துறை - அரசவாகை. 1 ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு 2எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. (இ - ள்.) நீதான, போரைக்காணின் அப்போரை வென்று அப் பகைவரது படையை விலக்கிஎதிர்நிற்றலான் வாள்வாய்க்கத் தைத்தவடு அமுந்தியஉடம்புடனே கேட்ட செவிக்கு இனியை, கண்ணுக்கு இன்னாய்;பகைவராகிய அவர்தாம், நின்னைக் காணிற்புறந்தருதலாற் புண்ணறியாத உடம்பாகிய வடிவுடனே கண்ணுக்குஇனியர், செவிக்கு இனியரல்லர்; அதனால், இங்ஙனம்நீயும் ஒன்றினியை; அவரும் ஒன்றினியர்; இனி அவரொவ்வாதனவேறு யாவை யுள; வெல்லும் போரினைச் செய்யும் வீரக்கழலணிந்த திருந்திய அடியினையும் கடிய செலவினையுடையகுதிரையையுமுடைய கிள்ளி ! நின்னை மதித்திருக்கும்இவ்வுலகம்; அதற்குக் காரணம் யாதோ? பெருமானே! எமக்குச்சொல்லுவாய்-எ - று. நீ கட்சின்னாயெனப் பழித்ததுபோலப்புகழ்தலும், (தண்டி. சூ. 64) அவர் கட்கினியரெனப்புகழ்ந்ததுபோலப் பழித்தலும் சில அணிதோன்ற நின்றன. |