(கு - ரை.) 1. நிரப்பாது - பூர்த்திசெய்யாமல்.2. புறநா. 204 : 2; “இல்லென விரந்தோர்க்கொன்றீயாமை யிழிவு” (கலித். 2); “உள்ள, திரப்போனின்மை கண்டுங், கரப்போன் சிறுமை யானுறு கவ்வே”(தகடூர். “கலிமானோயே” என்னும்பாடல்) 4. “இரும்புமேய்ந் தொழிந்த மிச்சில்வரை மார்பன்”,“இரும்புண்டு மிகுத்த மார்பு”, “இரும்பெச்சிற்படுத்தமார்பர்” (சீவக. 1790, 2281, 2353) 5. “மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்” (நற்.226); “மரமுதல் சாய மருந்துகொண் டாங்கு” (பெருங்.1. 37 : 188); “பால் கொண்ட வத்தி யெனவே யுடல்வடுப்பட்டவெமர்” (வெங்கைக்கோவை, 99)தொல். உவம சூ. 20, பேர். மேற். 5 - 6. “அலகில் வெற்றியு முரிமையு மிவையென வவய வத்தினிலெழுதிய வறிகுறி யவையெ னப்பல வடுநிரை யுடையவர்”(கலிங்கத். 353); “பயில்வடுப் பொலிந்தயாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு” (பெரிய.கண்ணப்ப. 12); “கொடுஞ்சமரிற் பட்ட, வடுத்துளைத்தகல்ல பிராமம்” (தனிப்பாடல்) 7. புறநா. 173 : 11. ‘ஈர்ந்தையோனே....பகைஞனென்புழி, ஈர்ந்தையோனென்னுமுற்றிற்குமுடிபாகிய பகைஞனென்னும் பெயரை இடையினின்றசொல்விசேடித்து நின்றது’ (தொல். எச்ச. சூ. 59, ந.) 9.முதுவாயிரவல : புறநா. 48 : 7, குறிப்புரை. 11. உண்ணாமருங்குல் : புறநா. 260 : 6. 12. புறநா. 170 : 15. 12 - 3. புறநா. 312 : 3. மு. தும்பைத் திணைக்குரிய துறைகளுள், “தார்நிலை”என்பதற்கு மேற்கோள்காட்டி, ‘இதனுள், பாணன்அதுதோன்றப் புகழ்ந்தவாறு காண்க’ என்பர் (தொல்.புறத்திணை. சூ. 14, இளம்.); ‘நிரப்பாது கொடுக்குமென்னும் புறப்பாட்டினுள் இறையுறு விழுமந்தாங்கியென்பதும் அது’ (தொல். புறத்திணை. சூ. 17, ந.) (180)
|