(கு - ரை.) 1.புறநா. 178 : 2, குறிப்புரை. “காற்கடுப் பன்ன கடுஞ்செல லிவுளி” (அகநா. 224 : 5) 3. “கடன்மரு டானை” (அகநா. 212 : 15) 1-4. ‘வளிநடந்தன்ன....களிற்றின ரெனாஅ என்பதனுள் என என்பது எனாவென்று வந்து எண்ணுக்குறித்தது’ (தொல். இடை. சூ. 40, தெய்வச்.) 5. “கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப், பெய்தினி வாழியோ பெருவான்” (குறுந். 270 : 3 - 4); “உருமிடி முரசம்” (முருகு. 121) 1-8. ‘வளிநடந்தன்ன.....இலமே : என்புழி வினைக்குறிப்பு எண்ணிவந்து தொகைபெறாது நின்றது’ (தொல். இடை. சூ. 44, தெய்வச்.) 10. இடுமுட்படப்பை : “இடுமு ணெடுவேலி” (கலித். 12 : 1) 11. முஞ்ஞை-முன்னை. புறநா. 320 : 1, 328 : 14. 10-11. “முன்றிலாடு முஞ்ஞை மூதிலை கறிக்கும்” (தொல். செய். சூ. 31, பேர்; ந. மேற்.) 14. “பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்” (கலித். 133 : 8) 16-8. “நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே, கல்லார்கட்பட்ட திரு” (குறள், 408) (197)
|