(கு - ரை.) 1. ஆங்கண் - அவ்விடம்,இன்கடுங்கள்; நற். 10 : 5; குறுந். 298 : 5; அகநா.76 : 3, 137 : 6. 2. மதவென்பது வலியென்பதை விசேடித்தஉரிச்சொல். மதவலி: முருகு. 232. 3-4. ஒதுங்கின்று - ஒதுங்கிற்று;இவையிரண்டும் எச்சப் பொருளவாய் நின்றன. தார்-முன்படை. 5. நல்கல் - உவத்தல்; “நறுமலர்க்கோதாய் நல்கினை கேளாய்” (மணி. 12 : 56) 6. தித்தன் - உறையூரிலிருந்த ஒருசோழன்’ புறநா. 352 : 9 - 10, 395 : 18 - 9; “நொச்சிவேலித் தித்த னுறந்தை” (அகநா. 122 : 21) 7. புறநா. 73 : 9-11, குறிப்புரை. 9. கடந்தடுதல் : புறநா. 8 : 5, 23 :16, 40 : 2, குறிப்புரை; கலித். 101 : 31, 105 : 1; பரி.15 : 45. மு. மல்வென்றிக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 16, இளம்; சூ. 20, ந.
1 புறநா. 274 : சீவக. 2259, ந. 2 இவன் பெயர் இப்பாட்டின் முதலிரண்டடிகளிற்காணப்படுகிறது. 3 “நல்கியா ணல்கியவை” (கலித்.138 : 13) என்ற இடத்து, என்னாலே காமிக்கப்பட்டவள்எனக்குக் காதலித்துத் தந்தவை’ எனப் பொருளெழுதுவர்நச்சினார்க்கினியர்.
|