(கு - ரை.) 1. ஆய்மணி - ஆராய்ந்தெடுத்த மாணிக்கம்; அழகிய மணியுமாம். 2. வட்டப்பூண் புரள; மதியுறழ் ஆரம் - பிறைவடமுமாம். 3. முரசு பலிபெறுதல் இந்நூல் 50-ஆம் பாட்டாலும் அதன் குறிப்பாலும், "கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை, ஆடுநர் பெயர்ந்து வந் தரும்பலி தூஉய்" (பதிற்.17 : 5 - 6); "கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம், பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலி யோச்சி" (பெருங்.2. 2 : 29 - 30) என்பவற்றாலும் அறியலாகும். 5. வெற்றியைப் புலப்படுத்தும் வெள்ளிய கொடி: "விசயம் வெல்கொடி யுயரி’ (முல்லை.91); "புலவுப்படக் கொன்று மிகைதோ லோட்டிப், புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி" (மதுரைக். 370-71); "மலைநீர், வென்றெழு கொடியிற் றோன்றும்" (மலைபடு.581 - 2); "வான்றோய் வெல்கொடி" (பதிற். 69 : 1) 6. அணங்கு உருத்தன்ன தானை - தெய்வங்கள் உருக்கொண்டு வந்தாற்போன்ற சேனை; உருத்தன்ன - கோபித்தாற்போன்ற வென்றுமாம். 7. புறநா.56 : 11; "கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின்" (முருகு.81) 12. தானநீர் கடலிற் சென்று பரவ. 13. ஆம் - நீர். அடை - தண்ணடை; மருதநிலத்து ஊர். 17. வாய்வன் காக்கை - வலிய வாயையுடைய காகம்; கூகை - கோட்டான். மு. புறநா. 238 : 3. 17 - 8, புறநா. 356 : 2; "பேணா ரகநாட்டு, நன்பகலுங் கூகை நகும்" (பு. வெ.39) 19. சுற்றத்தின் மிகுதி கூறியபடி. 20. இல்லென்று - இல்லையென்று. (362)
|